Advertisment

உள்துறையில் இருந்து போன்... பத்மபூஷன் விருது பெற மே 8-ம் தேதி மகனுடன் டெல்லி செல்லும் பிரேமலதா!

உள்துறை அமைச்சகத்தில் இருந்து போன் வந்தது. மே 9-ம் தேதி டெல்லியில் கேப்டன் விஜயகாந்த் க்கு பத்மபூஷன் விருது வழங்குகிறார்கள், அதற்காக மே 8-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Premalatha Vijayakanth

பிரேமலதா விஜயகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய பத்ம விருதுகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில், தமிழ் திரைப்பட நடிகரும், தமிழக அரசியல்வாதியும் தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் விருது அவரது இறப்புக்கு பிறகு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்திடம்,  கடந்த வாரம்கூட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, விஜயகாந்த்-க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்களுக்கு அழைப்பு வரவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) கூறியதாவது:  “போன வாரம் அழைப்பு வரவில்லை, அது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த ஹாலின் அமைப்பு மிக மிக சிறியது என்பதனால், மூன்று பிரிவுகள், நான்கு விரிவாக தான் எப்போதும் விருது கொடுப்பார்கள். நீங்கள் அனைவரும் கேட்பது போல, 3 நாளைக்கு முன்னாடி உள்துறை அமைச்சகத்தில் இருந்து போன் வந்தது. மே 9-ம் தேதி டெல்லியில் கேப்டன் விஜயகாந்த் க்கு பத்மபூஷன் விருது வழங்குகிறார்கள. என்னை மே 8-ம் தேதி டெல்லிக்கு வந்து தங்க வேண்டும் என்று கூறினார்கள். அடுத்த நாள் 6:30 மணிக்கு கேப்டனுக்கு விருது தரப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். எனவே நாங்கள் மே 8-ம் ஹேதி தேதி டெல்லி செல்கிறோம்.  டெல்லிக்கு இருவர் மட்டுமே வரலாம் என்று கூறியதால், நானும் என்னுடன் விஜய பிரபாகரனும் வருவார்” என்று கூறினார்.

தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கிறது, அதனால் பள்ளிகளைத் திறக்கும் தேதியை தள்ளிப் போட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதில் அளித்த பிரமலதா விஜயகாந்த், “வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறப்பார்கள். ஜூன் மாதம் தொடங்கிய பிறகு தேர்வு முடிவுகள் வர இருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் ஒரு வாரம் தள்ளி பள்ளிகளை திறப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அனைவரும் குழந்தைகள் தான். அதனால், அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது அவசியம் கடுமையாக வெயில் இருந்தால் ஒரு வாரம் கழித்து கூட பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. 



மக்களவைத் தேர்தல் முடிந்து இருக்கிறது இந்த முறை விஜய பிரபாகரன் போட்டியிட்டு இருக்கிறார். தேர்தல் எப்படி இருந்தது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரேமலதா விஜயகாந்த் பேசினர். “விருதுநகர் தொகுதிக்கு வந்து பார்த்தவர்களுக்கு தெரியும், விஜய பிரபாகரன் ஏறக்குறைய ஒரு மாத காலம் விருதுநகரில் தங்கி இருந்து எல்லா கிராமங்களுக்கும் நேரடியாக சென்ற ஒரு வேட்பாளர். விருதுநகரில் தொகுதியில் எல்லாமே கிராமப்புற பகுதிகள், அவர் விருதுநகரில் தங்கியிருந்த காலத்தில் எல்லா ஊருக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்திருக்கிறார். கடுமையாக உழைத்திருக்கிறோம், எல்லோருடைய ஆசையும் என்னவென்றால் விருதுநகரில் கேப்டன் விஜயகாந்த் மகன் போட்டியிட்டு இருக்கிறார். இந்த மண்ணின் மைந்தர் அவருக்கு நாங்கள் உறுதியாக வெற்றி வாய்ப்பை தருவோம் என்று சொல்லி ஓட்டு மொத்த பெண்கள், இளைஞர்கள், புது வாக்காளர்கள் என்று எல்லாருமே விஜய பிரகாரனுக்கு வாக்களித்ததாக கூறுகிறார்கள்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Premalatha Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment