அரவிந்த் கெஜ்ரிவால்(Arvind kejriwal) இந்திய அரசியல்வாதியும், பிரபலமான சமூக ஆர்வலரும் ஆவர். இவர் 16 ஆகஸ்ட் 1968இல் ஹரியானாவில் பிறந்தார். ஐஐடி கரக்பூரில் இயந்திர பொறியியல் படிப்பு பயின்ற அவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஐஏஎஸ் பணியில் சேரும் முயற்சியிலும் ஈடுபட்டு சாதித்து காட்டினார். 1993 ல் இந்திய வருவாய் சேவையில் பணிபுரிந்தார். அதே ஆண்டு, ஐஆர்எஸ்-இல் தன்னுடன் பணிபுரிந்த சுனிதாவை 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்
1999இல் பரிவர்த்தன் இயக்கம் மூலம் ரேஷன் அட்டை ஊழலை அம்பலப்படுத்தினார். பின்னர், சமூக பணிக்காக ஐஏஎஸ் வேலையை ராஜினாமா செய்தார்.2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் தன்னை இணைந்தபோது கெஜ்ரிவால் பிரபலமடைந்தார்.
பின்னர், அன்னா ஹசாரேவுடன் இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல்மயமாக்குகிறாரா இல்லையா என்பது குறித்து கருத்து வேறுபாடு எழுந்ததை தொடர்ந்து, சொந்தமாக ஆம் ஆத்மி என்கிற கட்சியை தொடங்கி, 2013 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதில், 70 இடங்களில் 28 இடங்களில் வெற்றிபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவுடன், டெல்லியின் முதல்வராக பதவியேற்றார். ஆனால் 49 நாட்களில் அவர் ஜன் லோக்பால் அமைக்கப்படாததைக் கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் பதினாறாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 70 இடங்களில் 67 இடங்களை வென்றார். டெல்லியின் ஏழாவது முதலமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்ற அரவிந்த் கேஜ்ரிவால், தனது அண்டை மாநிலமான பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பை பெறும் வகையில் கடினமாக உழைத்தவர்.Read More
மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது என்பது உண்மையில் நமது அரசியலமைப்புத் திட்டத்தை மீறுவது மட்டுமல்ல, எந்த ஜனநாயகத்திலும் உச்சமான மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும்; முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய…
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம்; தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின்…
மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் சிறைவாசம், மோடியை “எதிரி” என்று நிச்சயமற்ற வகையில் குறிக்கும் அரசியலின் முத்திரைக்குத் திரும்பும்படி அரவிந்த் கெஜ்ரிவாலை கட்டாயப்படுத்தியுள்ளது
உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் களமாடும் ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை பாதியாகக் குறைப்பதாகவும், வெற்றிபெறும் நகராட்சிகளில் தண்ணீர் வரியைத் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது அழுக்கு அரசியல் என முதல் அமைச்சர்…
விளம்பரங்களுக்காகச் செய்யப்பட்ட முழுச் செலவையும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து மாநிலக் கருவூலத்திற்குத் திருப்பி வசூலிக்குமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது
நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு ஒரு கடினமானப் பணி இருந்தது. இருந்தாலும்கூட, வாக்கு எண்ணிக்கை நாளில், காலையில் பா.ஜ.க ஆம் ஆத்மிக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க இறுதியில் பின்வாங்கியது.
7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த போதிலும் எனது வங்கிக் கணக்கும் எனது கட்சி வங்கிக் கணக்கும் காலியாக உள்ளது. மோர்பி பால விபத்தில் குற்றவாளிகளை பாஜக பாதுகாக்கிறது…
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயினுக்கு, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, மோர்பி சம்பவத்தில் இருந்து…