நிர்மலா சீதாராமன்(Nirmala sitharaman), இந்தியாவின் தற்போதைய நிதியமைச்சர் ஆவார். தமிழ்நாட்டின் மதுரையில் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று ஸ்ரீ நாராயணன் சீத்தாராமன்-சாவித்ரி தம்பதிக்கு பிறந்தார். இவரின் அப்பா ரயில்வே துறையில் பணியாற்றினார். இளங்கலைப் பட்டத்தை திருச்சியில் உள்ள சீத்தாலக்ஷ்மி ராமசுவாமி கல்லூரியில் முடித்த இவர், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை பட்டத்தை முடித்தார்.
பரக்கல பிரபாகர் என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் லண்டனுக்கு குடிப் பெயர்ந்தார். சிறிது காலம் லண்டனில் கழித்தப் பின்பு 1991 ஆம் இந்தியாவிற்கு திரும்பினார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார்.
2003 – 2005 ஆண்டுகளில் நிர்மலா சீத்தாராமன் “ பெண்கள் நல ஆணையத்தில் “ உறுப்பினராக பணியாற்றி வந்தார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட சுஷ்மா சுவராஜ், அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்புப்படி 2006 ஆம் ஆண்டு கட்சியின் வெறும் பேச்சாளராக இணைந்த இவர் , 2010 ஆம் ஆண்டு ரவி சங்கர் தலைமையிலான கட்சியின் 6 பேர் கொண்ட குழுவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரானார்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கும் , பா.ஜா.காவிற்கும் ஆதரவான பிரச்சாரத்தின் பலனாக, மே 26 , 2014 அன்று வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மனோகர் பரிக்கர் மறைவிற்குப் பின்னர் இவர் இந்தியப் பாதுக்காப்புத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார். 2019 மே 31 அன்று மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார்Read More
நாட்டின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) 2023க்கு முன்னதாக, இந்திய பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வரி வசூல் வளர்ச்சி மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து அதிகாரப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களின் வருவாய் ஓட்டத்திற்கான சிறந்த உறுதியானது மாநிலங்களின் அதிக மூலதனச் செலவிற்கு ஆதரவாக…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி ஜனவரி…
தெலுங்கானாவில், காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூரில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் வைக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவில் சப்ளை துறை அதிகாரிகள்…
நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியது பொய்; ஜிஎஸ்டி கவுன்சிலை ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக மத்திய அரசு பயன்படுத்துகிறது – பி.டி.ஆர்; நிர்மலா சீதாராமனுக்கு நிதானம் தேவை –…
ராஜ்ய சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில்…
அமுதம் பால் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தினமும் பயனாளிகளுக்கு ¼ லிட்டர் பசும் பால் வழங்கப்படுகிறது