இந்தியா பாகிஸ்தான் இடையே ரூ. 2.7 லட்சம் கோடி வர்த்தகம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பல்வேறு காரணங்களால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் உலக வங்கி தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தகம் அறிக்கை:
இதுத் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள உலக வங்கி, இந்தியா பாகிஸ்தான் இடையே 3700 கோடி டாலர் வர்த்தக வாய்ப்பு உள்ளன. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் நீடித்து வரும் அரசியல் பகைமை காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்களிலும் இதன் தாக்கம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் இயல்பான வர்த்தக உறவிலும் சிக்கல் இருப்பதால், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சங்கிலி தொடர் உத்திகள் பாதிக்கப்பட் டுள்ளன. உயர் மதிப்பிலான வர்த் தகத் துறை தேக்கமடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவிலிருந்து வாகா வழி யாக 138 பொருட்களை மட் டுமே இறக்குமதி செய்ய பாகிஸ் தான் அனுமதிக்கிறது. இந்த வழியில் பொருட்களைக் கொண்டு செல்லும் டிரக்குகள் எல்லைக் கோடு வரை மட்டுமே அனுமதிக் கப்படுகின்றன. அதன் பின்னர் வேறு டிரக்குகளுக்கு பொருட்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக நேரமும், செல வும் அதிகரிக்கிறது என்றும் குறிப் பிட்டுள்ளது
தெற்காசிய அளவிலான வர்த்த கத்தில் பாகிஸ்தான் 82.1 % பொருட் களை வர்த்தக கட்டுப்பாடுகளு டன் இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. இந்தியா விலிருந்து 1209 பொருட்கள் இறக்குமதி செய்வதை பாகிஸ் தான் நீண்ட காலமாகவே தடை செய்து வைத்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் இறக்குமதி செய்ய தடை செய்துள்ள பல பொருட்கள் அந்த நாட்டு வழியாக சவுதி அரேபிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.