Advertisment

Post Office: அவசரத்திற்கு 2% வட்டியில் கடன்; மாதம்தோறும் சேமிக்க சிம்பிள் ஸ்கீம் இதுதான்!

Post office savings: அவசரத் தேவைக்கு ரெக்கரிங் டெபாசிட்டிலிருந்து 2% வீதத்திலும், ஆர்.டி. மீதான வட்டி விகிதத்திலும் கடன் பெறலாம்.

author-image
WebDesk
New Update
po

நல்ல லாபத்தை நோக்கி முதலீடு செய்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் நிலையான வட்டி வருமானம் கிடைப்பதோடு சேமிப்புப் பணமும் பாதுகாப்பாக இருக்கும்.மேலும் மாத வருமானம் வாங்குவோருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.

Advertisment

ரெகரிங் டெபாசிட்டுக்கு தற்போது ஆண்டுக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். பெறப்படும் வட்டிக்கு முழுமையாக வரி விதிக்கப்படுகிறது. தொடர்ச்சியான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் மாதத் தவணைகளைத் தவறவிட்டால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தவணைகளை கட்டத் தவறினால் அபராதம்

ஒரு மாதம் நீங்கள் பணம் கட்ட தவறினால் அடுத்தமுறை கட்டும்போது அதற்கான அபராதத்தையும் சேர்த்து கட்ட வேண்டும். அபராத தொகையானது ஒவ்வொரு 5 ரூபாய்க்கும் 0.05 அதாவது 5 பைசா வீதம் வசூலிக்கப்படும். அதேபோல் தொடர்ந்து 4 மாதங்கள் பணம் கட்டவில்லை என்றால் RD கணக்கானது Discontinue செய்யப்படும். மேலும் 2 மாதங்களுக்குள்ளாக அந்த கணக்கை புதுப்பிக்கவில்லை என்றால் கணக்கை தொடர வாய்ப்பில்லை.

5 ஆண்டு போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்

குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ.100 டெபாசிட் செய்யலாம். மாதத்தின் முதல் 15 நாட்களில் கணக்கு திறக்கப்பட்டிருந்தால், அந்த தொகையை மாதத்தின் 15 ஆம் தேதி வரை டெபாசிட் செய்ய வேண்டும். ஒரு வேளை அதற்குப் பிறகு கணக்கு திறக்கப்பட்டால், அந்தத் தொகை மாதத்தின் கடைசி தேதிக்கு முன்பு டெபாசிட் செய்யப்பட வேண்டும். ஐந்து ஆண்டுகள் மெச்சூரிட்டிக்கு பிறகு, தேவைப்பட்டால் டெபாசிட் கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம்.

ஆர்டியிலிருந்து கடன் பெறலாம்

அவசரத் தேவைக்கு ரெக்கரிங் டெபாசிட்டிலிருந்து 2% வீதத்திலும், ஆர்.டி. மீதான வட்டி விகிதத்திலும் கடன் பெறலாம். RD கணக்கை கணக்கு திறந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முன்கூட்டியே மூட முடியும். முன்கூட்டியே மூடப்பட்டால், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி செலுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் சேமிப்புகளை முறைப்படுத்த ஆர்.டி உதவுகிறது. எஃப்.டி.களில் உடனடி வருமானம் அதிகமாக இருப்பதால், அசல் தொகை உடனடியாக வட்டியைப் பெறுகிறது, அதே நேரத்தில் ஒரு ஆர்.டி உங்கள் நிதியை படிப்படியாக உருவாக்குகிறது, இது சிறியதாக இருக்கும்போது குறைந்த வட்டியைப் பெறுகிறது. நிதி அவசரகாலத்தின் போது நீங்கள் கடன் பெறவும் உதவுகிறது. உங்கள் வைப்புத்தொகையின் மதிப்பில் 90% வரை கடன் வாங்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Post Office Scheme Savings Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment