Advertisment

என்.டி.டிவி.,யின் 29 சதவீத பங்குகளை வாங்கிய அதானி.. அடுத்த திட்டம் என்ன?

என்டிடிவி பங்கு செவ்வாயன்று பிஎஸ்இயில் ரூ 366.20 இல் முடிவடைந்தது.

author-image
WebDesk
New Update
Adani steps into NDTV

இதற்கிடையில், NDTV நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரின் தலையீடு, உரையாடல் அல்லது ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதாக பங்குச் சந்தைகளுக்கு அனுப்பிய அறிவிப்பில் NDTV தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 23) என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. நடப்பாண்டின் மே மாதத்தில் அதானி குழுமம் BloombergQuint நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை மே மாதம் வாங்கியது.

தொடர்ந்து, மற்றொரு செய்தி நிறுவனத்தில் அதன் முதலீட்டை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதானி குழுமத்தின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் நிறுவனம், விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் நிறுவனத்தை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிறுவனம் 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் என்டிடிவி நிறுவனத்துக்கு ரூ.403.85 கோடி கடன் அளித்திருந்தது. இது வட்டியில்லா கடன் ஆகும். இந்தக் கடனுக்காக 99.9 சதவீத பங்குகளாக மாற்றுவதற்கான உரிமையை VCPLக்கு வழங்கியது.

என்டிடிவியில் RRPR 29.18 சதவீத பங்குகளை வைத்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் முழு உரிமையாளரான ரிலையன்ஸ் ஸ்ட்ரேடஜிக் வென்ச்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து VCPL நிதி திரட்டியது. என்டிடிவி நிறுவனமான RRPRக்கு கடனை நீட்டித்தது.

என்டிடிவி அல்லது அதன் நிறுவனர், பங்கு ஆதரவாளர்கள் ஆகியோர்களுடன் எந்த விவாதமும் இல்லாமல், 99.50% கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான உரிமையை அது (விசிபிஎல்) பயன்படுத்தியதாக விசிபிஎல் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்ஆர்பிஆர், என்டிடிவியின் 29.18% பங்குகளை வைத்திருக்கும் விளம்பரதாரருக்கு சொந்தமான நிறுவனமாகும்.

113.75 கோடிக்கு VCPL வாங்கியதைத் தொடர்ந்து, அதானி குழுமம் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கான திறந்த சலுகையை அறிவித்தது. குழுமம் ஒரு பங்கிற்கு ரூ.294 வழங்குகிறது. என்டிடிவி பங்கு செவ்வாயன்று பிஎஸ்இயில் ரூ 366.20 இல் முடிவடைந்தது, அதன் முந்தைய நாளின் முடிவை விட 2.6 சதவீதம் அதிகம்.

ஆகஸ்ட் 23 அன்று, அதானி குழுமத்திற்கு சொந்தமான விசிபிஎல் நிறுவனப் பதிவாளரிடம், சஞ்சய் புகாலியா, செந்தில் செங்கல்வராயன் மற்றும் சுதிப்தா பட்டாச்சார்யா ஆகிய மூன்று இயக்குநர்களை நியமிப்பதாக அறிவித்தது. புகாலியா AMG Media Networks Ltd இன் CEO ஆவார்.

RRPR உடனான VCPL இன் கடன் ஒப்பந்தம் 2017 இல் SEBI விசாரணையைத் தொடங்கியதுடன் ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உள்ளானது. ஜூன் 2018 இல் நிறைவேற்றப்பட்ட அதன் உத்தரவில், RRPR அதன் முந்தைய கடனாக ரூ. 375 கோடியை ICICI வங்கிக்கு திருப்பிச் செலுத்துவதற்காக VCPL இலிருந்து கடனைப் பெற்றதாக சந்தை கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார். டிசம்பர் 2008 இல் இந்தியாபுல்ஸ் நிதிச் சேவை நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ரூ.540 கோடி கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக எடுக்கப்பட்டது.

அதானி குழுமம் மீடியா துறையில் கவனம் செலுத்திவருகிறது. எனினும், தற்போது என்டிடிவியில் தற்போது அதானி குழுமத்தை விட ராய்ஸ் நிறுவனம் அதிகமாக உள்ளது. இருப்பினும் என்டிடிவியில் அதானி குழுமத்தின் கை ஓங்க வாய்ப்புள்ளது என்றே சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், NDTV நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரின் தலையீடு, உரையாடல் அல்லது ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதாக பங்குச் சந்தைகளுக்கு அனுப்பிய அறிவிப்பில் NDTV தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nse Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment