டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல் நிறுவனம், தற்போது ரூ. 9 ரீசார்ஜ் திட்டத்தில் அளவில்லாத வாய்ஸ் காலிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஜியோவின் வருகைக்கு பின்னர், டெலிகாம் சந்தையில் ஒஎரு புரட்சியே ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்த ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன் , ஐடியா போன்றவற்றிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்த மவுசு, வெகுமாக குறைய துவங்கியது. கேஷ் பேக் ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், ரீசார்ஜ் கூப்பன்கள், இலவச டேட்டா என ஜியோ வழங்கிய அனைத்து வசதிகளும் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்தது.
ஜியோவுடன் போட்டிப் போட துவங்கிய மற்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், அதிக பலன்களை தர ஆரம்பித்தனர். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம், ஜியோவுடன் நேரடியாக சந்தையில் மோத துவங்கின. டெலிகாம் நிறுவனங்களின் இந்த போட்டியால் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு பலன்களை பெற்று வந்தனர். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் பழைய ரீசார்ஜ் திட்டங்களை புதுப்பிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 10, 20 ரீசார்ஜ் திட்டங்களைப் போலவே தற்போது ரூ.9 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, ரூ. 9 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாளைக்கு மட்டும் செயல்படும் அன்லிமடெட் வாய்ஸ் காலிங், 100 இலவச குறுங்செய்திகள், 100எம்பி டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏர்டெல்லின் திட்டம் நேரடியாக ஜியோவின் ரூ. 19 திட்டத்துடன் களத்தில் இறங்குகிறது. ஜியோவின் இந்த ரூ. 19 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் , வெளியூர் அழைப்புகள், 20 எஸ்எம்எஸ், 150 எம்பி டேட்டா வழங்கப்படுகிறன. ஏர்டெல் இந்த திட்டம் கோம்போ ஆஃபரில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.