ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக திகழும் ஏர்டெல் நிறுவனம் சமீப காலமாக, ஜியோ நிறுவனத்துடன் நேரடியாக களத்தில் போட்டி போட்டு வருகிறது. டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னரே, பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வந்த அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஜியோ வருகைக்கு பின்னர், அதிரடியாக 4ஜி சேவைக்கு மாறினர்.
அதன் பின்பு, மற்ற நிறுவனங்களும் 4ஜி சேவையை வழங்க முடிவு செய்தனர். இருப்பினும், சந்தையில், பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஏர்டெல் நிறுவனம், ஜியோவைப் போலவே ரீசார்ஜ் திட்டங்களில் சலுகைகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. குறைந்த விலையில் அதிக டேட்டா, அளவில்லா டேட்டா, காலிங், கேஷ்பேக் ஆஃபர், கிஃப்ட் வவுச்சர், ரீசார்ஜ் கூப்பன்கள் என ஜியோவும்- ஏர்டெல்லும் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய புதிய திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம், ஜியோவையே முந்தும் அளவிற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ரூ. 98 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு செயல்படும் 1 ஜிபி டேட்டா, நிபந்தனைகளுடன் கூடிய வாய்ஸ் காலிங் சேவையை வழங்கி வந்தது. தற்போது இந்த ரீசார்ஜ் திட்டம் இருமடங்கு விரிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல், ரூ. 98 க்கு ரீசார்ஜ் செய்வோருக்கும், 28 நாட்கள் செயல்படும் 5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கும் 100 இலவச குறுங்செய்திகள், அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கவுள்ளது.
ஜியோ நிறுவனம் இதே, ரூ. 98 ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு செயல்படும், 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் தோறும் 100 இலவச குறுங்செய்திகள், அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை வழங்கி வந்தது. தற்போது ஏர்டெல் நிறுவனம் ஜியோவை மிஞ்சும் அளவிற்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.