ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு , ஒரு குறிப்பிட்ட வட்டியைத் தரும் முதலீடு தான் பிக்சட் டெபாசிட். பிக்சட் டெபாசிட் தான் மிக முக்கியமான வங்கி முதலீடுகளில் ஒன்றாக இந்தியாவில் விளங்குகிறது.
இரு வகையான பிக்சட் டெபாசிட்களில் முதலாவது வங்கிகளில் முதலீடு செய்யப்படுகின்றது. அதிலும் இருவகை உண்டு. ஒன்று வங்கிகளில் செய்யப்படும் முதலீடு 2ஆவது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு. இது இரண்டும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரண்டிலும் ரூ. 1 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவாதம் அளிக்கின்றது.
2வது வகை பிக்சட் டெபாசிட் கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்யப்படுகின்றது. பொது மக்களிடம் பணம் திரட்ட இந்த நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட்களை பெறுவதுண்டு. இந்த முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டியும் அதிகம் என்பதோடு இதற்கு ரிசர்வ் வங்கியின் உத்தரவாதம் கிடையாது.
பிக்சட் டெபாசிட்களில் போடப்படும் முதலீடு இரட்டிப்பு லாபத்தை தரும் என்றாலும் அதில் வட்டியைக் கவனிக்க வேண்டும்.