Advertisment

நீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க!

Long Term Investment Plans: நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் தரும் ஐந்து சிறந்த திட்டங்கள் பற்றி காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
money investment ideas tamil money investment tips

பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுக்கு அதிக வருமானத்தை பெற விரும்புகிறார்கள். முதலீட்டுக்கு பங்கம் இல்லாமல் சில ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்க குறுகிய கால முதலீட்டு திட்டங்கள் பல உள்ளன. ஆனால் தனி நபர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதில் சரியானது எது என்பதை தேர்ந்தெடுப்பது ஒரு கடினமான ஒரு விஷயம்தான். முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக நீண்ட கால முதலீடுகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒன்று பணத்தை பெருக்குவது மற்றொன்று எதிர்காலத்திற்காக சேமிப்பது. தற்போது தேவைகளுக்கு ஏற்ப எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

Advertisment

மியூச்சுவல் ஃபண்டு

முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் திட்டங்களில் ஒன்று மியூச்சுவல் ஃபண்டு. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 12 சதவீதம் வரையில் ரிட்டன் கிடைப்பதால் இந்த வகை திட்டங்களில் முதலீடு செய்யும்படி வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் மாதம் ரூ.5,000 சேமித்தால் 20 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கிடைக்கும். இதில் உங்களது முதலீட்டுப் பணம் ரூ.12 லட்சம் மட்டுமே. எஞ்சிய தொகை அனைத்தும் லாபமாகக் கிடைக்கும். பரஸ்பர நிதிகளில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் முதலிடம் வகிக்கின்றன.

தேசிய ஓய்வூதிய திட்டம்(NPS)

என்.பி.எஸ் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை உதவியாக இருக்கும். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

PPF அல்லது பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால அடிப்படையில் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். பாதுகாப்பான கணிசமான வருவாய் கொடுக்கும் முதலீடு என்பதால் நீண்ட கால நோக்கங்களுக்காக குறிப்பாக ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. பிபிஎஃப் கணக்கைத் துவங்க குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். PPF மீதான தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும் (மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த காலாண்டில்) . இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டமாகும். ஆனால் இந்த திட்டம் முதிர்வடைந்த ஒரு வருட காலத்திற்குள் மேற்கொண்டு 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம். பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3வது ஆண்டிலிருந்து கடன் பெறலாம். அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம்.

பங்குச் சந்தை முதலீடு

பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் நாம் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான திட்டமாக இருந்தாலும் இந்த வகை முதலீடு வழங்கும் வருமானம் நிலையானது இல்லை. பேலன்ஸ்ட் அட்வாண்டேஜ் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் சந்தை இறக்கங்களில் மிதமான பாதிப்புகளையே சந்திக்கின்றனர். பங்குச் சந்தையின் போக்குக்கு ஏற்ப முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் பெரும்பான்மை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஃபண்டுகளாக இவை இருக்கின்றன.

ரியல் எஸ்டேட் முதலீடு

ரியல் எஸ்டேட் முதலீடு என்பது எதிர்காலத்தில் சிறந்த வருவாயை எதிர்பார்ப்பவர்கள் ஒரு நல்ல தொகையை ஒரே நேரத்தில் செலவிடக்கூடியது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் சந்தையை உயர்த்தியுள்ளது. மேலும் இது நீண்ட காலத்திற்கான பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ppf Best Investment Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment