Better returns than bank fixed deposits : உங்கள் முதலீட்டில் இருந்து நீங்கள் வருமானம் பெற விரும்பும் போது நீங்கள் மாதாந்திர, வருடாந்திர, காலாண்டு வருவாய்களுக்கான சாத்தியத்தை எதிர்பார்ப்பீர்கள். அப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்களில் வங்களின் நிலையான வைப்பு நிதி, தபால் நிலையங்களில் மாதாந்திர வருவாய் திட்டம், எஸ்.சி.எஸ். எஸ் அல்லது பி.எம்.வி.வி.ஒய் ஆகியவை அடங்கும்.
அனைத்து திட்டங்களிலும் பொதுவாக இருப்பது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே அந்த திட்டத்தின் கீழ் வருமானத்தை ஈட்ட முடியும். தேர்வு செய்யப்பட்ட 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலீட்டு பணம் திருப்பி வழங்கப்பட்டு விடும். வழக்கமான வருமானம் முதலீட்டாளருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
உடனடி வருடாந்திர திட்டம் (Immediate Annuity plan returns)
குறைந்த வட்டி விகித சூழல் 5 முதல் 10 ஆண்டுகளில் வங்கிகள் 5.5 சதவீதத்தை வழங்குகின்ற காலத்தில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 55 வயது முதலீட்டாளருக்கு, உடனடி வருடாந்திர திட்டத்தில் ரூ .10 லட்சத்தை வைத்து மொத்த தொகையுடன் வாழ்நாள் ஓய்வூதியத்தைப் பெறும் திட்டத்தில் முதலீடு செய்தால் சராசரி வருமானம் வாழ்நாள் வரை ஆண்டுக்கு 6 சதவீதமாகும். இளைய முதலீட்டாளர்களுக்கு, உடனடி வருடாந்திர திட்டங்களில் வருமானம் அதிகமாக கிடைக்கும்.
இந்தத் திட்டங்களிலிருந்து வருவாய் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பதவிக்காலத்திற்கும், முதிர்வு நேரத்தில் முதலீட்டு கார்பஸை மீண்டும் விரும்புகிறீர்களா இல்லையா என்பதற்கும் ஏற்ப வேறுபடுகிறது. உதாரணமாக, முதலீட்டு கார்பஸின் வருமானத்துடன் கூடிய வாழ்நாள் திட்டத்தை முதலீட்டு கார்பஸை திரும்பப் பெறாமல் குறுகிய காலத்திற்கு நிலையான செலுத்தும் விருப்பத்துடன் ஒப்பிட்டால் குறைந்த வருவாயையே தருகிறது.
சில காப்பீட்டு நிறுவனங்கள் இந்த திட்டங்களை வழங்குகின்றன. எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. லைஃப், ஐ.சி.ஐ.சி.ஐ, எச்.டி.எஃப்.சி போன்ற நிறுவனங்களும் உங்களுக்கு திட்டங்களை வழங்குகின்றன. இதில் நீங்கள் பெரிய தொகையை முதலீடாக செலுத்த வேண்டும். நீங்கள் தேர்வு செய்த திட்டத்திற்கு ஏற்ற வகையில் ஓய்வூதியம் அடுத்த மாதம் அல்லது காலாண்டில் இருந்தே வாழ்நாள் முழுவதும், உங்களின் துணையில் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
வட்டி விகிதம் உயர்வு குறைவு என்ற பிரச்சனை ஏதும் இல்லாமல் நீங்கள் கவலையின்றி இருக்கலாம். வங்கிகளில் இருக்கும் மறு முதலீட்டு அபயாங்கள் இதில் இல்லை. வாடிக்கையாளர்கள் 10/15/20/25 வருட காலத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் முழு காலத்திற்கும் வழங்கப்படும் வட்டி விகிதத்தை ”லாக்” செய்து கொள்ள வழங்கப்படும் வசதி தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இரண்டாவதாக, மற்ற ஓய்வூதிய திட்டங்களில் இருப்பது போன்ற முதலீட்டு உச்சவரம்பு இந்த திட்டங்களில் ஏதும் இல்லை.
திட்டங்களை தேர்வு செய்வதற்கு முன்பு நன்றாக அதனைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சில திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் திருப்பி தரப்படும். சில திட்டங்களில் முதலீட்டு பணம் தரப்படமாட்டாது. உங்களின் குழந்தைகள், துணை ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். எந்த திட்டம் உங்களுக்கு பொருந்தும் என்பதையும் நீங்கள் யோசிக்க வேண்டும். இப்போது நன்றாக இருக்கும் வருடாந்திர திட்டத்தின் வருமானம் நீண்ட காலத்திற்கு போதுமானதாக இருக்குமா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவும் உங்கள் செலவினங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள நிதித் திட்டமிடுபவரின் உதவியைப் பெறுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.