2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்தாண்டு வருமான வரிசலுகை அறிவிப்பு வெளியாகும் என மாத சம்பளத்தாரர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதற்கான அறிவிப்பு இடம்பெறாமல் ஏமாற்றம் அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், நடப்பாண்டுக்கான தனிநபர் வருமான வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை. உச்சவரம்பு இரண்டரை லட்சமாகவே தொடரும் என தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என கடந்த பட்ஜெட்டிலேயே கோரிக்கை எழுந்த நிலையில், இந்தாண்டும் அறிவிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil