நுகர்வோர், ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் பழக்கம் சமீககாலமாக அதிகரித்து வருகிறது. ஒரு நபர் சராசரியாக எவ்வளவு செலவிடுகிறார். எந்த மாதிரியான நேரங்களில் அதிக பொருட்களை வாங்குகிறார். இதன் காரணமாக பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா? விற்பனை பாதிப்பு ஏற்படுமா? அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்படும், எவ்வளவு வருவாய் வரும்..? என்பது போன்ற அனைத்து தகவல்களையும் திரட்ட புள்ளியல் துறையின் கீழ் செயல்படும் NSSO( NATIONAL SAMPLE SURVEY) அமைப்புக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் இந்த தகவல்கள் திரட்டப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.