Advertisment

மாதம் ரூ50000க்கு மேல் ஓய்வூதியம் வேண்டுமா?; உங்களுக்கான சிறந்த திட்டம் இதுதான்!

மாதம் ரூ.4500 முதலீட்டில், ரூ 50000க்குள் மேல் ஓய்வூதியம் கிடைக்கும் சிறந்த சேமிப்பு திட்டம் பற்றிய முக்கிய தகவல்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரே ஆண்டில் தி.மு.க-வுக்கு ரூ33.9 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு?

Chance to get above Rs.50000 pension in National pension scheme: ஓய்வு காலத்திலும் மாதம் ரூ. 50000க்கு மேல் வருமானம் கிடைக்கும் சிறந்த ஓய்வூதியம் திட்டம் கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சி தானே. அத்தகைய சிறந்த ஓய்வூதிய திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டம் பற்றிய தகவல்களையும், மாதம் ரூ. 50000க்கு மேல் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதையும் இப்போது பார்ப்போம்.

Advertisment

அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 2004 இல் தொடங்கப்பட்டது. இது 2009ல் அனைத்து தரப்பு மக்களுக்கும் விரிவிபடுத்தப்பட்டது.

ஓய்வுக்குப் பிறகும் வழக்கமான வருமானம் வேண்டுமானால், இதற்கு திட்டமிடல் மிக முக்கியமானது. ஏனென்றால், ஓய்வுக்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் தங்கள் மாதச் செலவுகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். சம்பளத்தைப் போலவே, வழக்கமான வருமான ஆதாரமாக இருக்க, இதற்கு ஒரு சிறந்த திட்டம் அவசியம். இன்று, பல வகையான ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, இதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றலாம். இவற்றில் ஒன்று தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS).

மாதம் ரூ.51,848 ஓய்வூதியமாகப் பெறுவது எப்படி?

இதற்கு நீங்கள், 21 வயதில் முதலீடு செய்யத் தொடங்கி, மாதம் ரூ.4,500ஐ 60 வயது வரை தொடர்ந்து 39 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்.

இதனால் ஆண்டுக்கு ரூ.54000 முதலீடு இருக்கும், மேலும் 39 ஆண்டுகளில் ரூ.21.06 லட்சம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.

சராசரியாக 10% வருமானம் கொடுக்கப்பட்டால், முதிர்வுத் தொகை ரூ.2.59 கோடியாக இருக்கும். அதாவது, ஓய்வு பெறும்போது, ​​மாதம் ரூ.51,848 ஓய்வூதியமாகப் பெறுவீர்கள்.

ஓய்வு பெற்றவுடன் ரூ.1.56 கோடி வருமானம்

NPS இல் 40 சதவிகித வருடாந்திர விருப்பம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஓய்வு பெற்ற பிறகு, வருடாந்திர விகிதமான 6% வீதத்தில், மொத்தமாக ரூ.1.56 கோடி கிடைக்கும். மீதமுள்ள ரூ.1.04 கோடி ஆண்டுத்தொகைக்கு செல்லும். இப்போது இந்த ஆண்டுத் தொகையிலிருந்து, ஒவ்வொரு மாதமும் 51,848 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவீர்கள். ஆண்டுத் தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக ஓய்வூதியமும் இருக்கும்.

முதலீட்டு தொகை எவ்வளவு?

NPS அடுக்கு-1 மற்றும் அடுக்கு-2 இன் கீழ் இரண்டு வகையான கணக்குகள் திறக்கப்படுகின்றன. அடுக்கு-1 என்பது ஓய்வூதியக் கணக்கு, அதே சமயம் அடுக்கு-2 என்பது தன்னார்வக் கணக்கு, இதில் ஊதியம் பெறும் எந்தவொரு நபரும் தனது சொந்த சார்பாக முதலீடு செய்யத் தொடங்கலாம். அடுக்கு-1 கணக்கு தொடங்கிய பின்னரே அடுக்கு-2 கணக்கு திறக்கப்படும்.

NPS அடுக்கு 1ஐ செயலில் வைத்திருக்க, ஆண்டு பங்களிப்பு ஏற்கனவே ரூ.6,000லிருந்து ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 65 வயது வரை இந்த முதலீட்டை செய்யலாம்.

இதையும் படியுங்கள்: தங்கம் vs ரியல் எஸ்டேட்; சிறந்த முதலீடு எது?

என்பிஎஸ் முதலீட்டில் 40 சதவீத வருடாந்திரத்தை வாங்குவது அவசியம். 60 சதவிகிதத் தொகையை 60 வயதிற்குப் பிறகு ஒரே நேரத்தில் திரும்பப் பெறலாம். குறைந்தபட்ச வருடாந்திர முதலீடு செய்யப்படாவிட்டால், கணக்கு முடக்கப்பட்டு செயலிழக்கப்படும்.

NPS ஐ ஆன்லைனில் தொடங்குவது எப்படி?

1. NPS கணக்கைத் தொடங்க, https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

2. புதிய பதிவு என்பதைக் கிளிக் செய்து உங்கள் விவரங்களை நிரப்பவும். மொபைல் எண் OTP மூலம் சரிபார்க்கப்படும். வங்கி கணக்கு விவரங்களை உள்ளிடவும்.

3. உங்கள் போர்ட்ஃபோலியோ மற்றும் நிதியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பயனர் பெயரை செட் செய்யவும்.

4. எந்த வங்கிக் கணக்கின் விவரங்கள் நிரப்பப்பட்டதோ, அந்தக் கணக்கின் ரத்து செய்யப்பட்ட காசோலையைக் கொடுக்க வேண்டும். இது தவிர புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5. பணம் செலுத்திய பிறகு, உங்களின் நிரந்தர ஓய்வூதியக் கணக்கு (PRN) எண் உருவாக்கப்படும். பணம் செலுத்திய ரசீதையும் பெறுவீர்கள்.

6. முதலீடு செய்த பிறகு, ‘e-sign/print பதிவு படிவம்’ பக்கத்திற்குச் செல்லவும். இங்கே நீங்கள் பான் மற்றும் நெட்பேங்கிங் மூலம் பதிவு செய்யலாம். இது KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) செய்யும்.

வரி விலக்கு

NPS இல், வாடிக்கையாளர்களுக்கு வரி விலக்கு வசதியும் கிடைக்கிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 80CCD(1), 80CCD(1b) மற்றும் 80CCD(2) ஆகியவற்றின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். பிரிவு 80C தவிர, அதாவது NPS இல் ரூ. 1.50 லட்சம், மேலும் ரூ. 50,000 விலக்கு பெறலாம். NPS இல் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ரூ.2 லட்சம் வருமான வரி விலக்கு பெறலாம்.

பிற நன்மைகள்

உங்கள் NPS கணக்கையும் மாற்றலாம். உங்கள் தேவைக்கேற்ப அதன் இருப்பிடத்தையும் மாற்றிக்கொள்ளலாம். சந்தாதாரர் தனது NPS கணக்கை மொபைல் பயன்பாடு மற்றும் கணினி மூலம் ஆன்லைனில் அணுகலாம். அதாவது, இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை, உங்கள் எல்லா வேலைகளையும் வீட்டில் இருந்தே செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pension Scheme National Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment