வருமான வரியை செலுத்துவதற்கான நேரம் தற்போது துவங்கிவிட்டது. அனைத்து வகையான வரிகளை தாக்கல் செய்யவும் எளிமையான இ-போர்ட்டல் வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. சாதாரண நாட்களில் ஐ.டி.ஆர். தாக்கல் செய்ய ஜூலை 31 இறுதி நாளாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது இந்த தேதி செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு மத்தியில் இடையே, அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். அத்தகைய சம்பள வரி செலுத்துவோருக்கு, அவர்கள் அறிந்திருக்க வேண்டிய சில முக்கிய விதிகள் இங்கே
படிவம் எண் 16 மற்றும் வருமான வரி ரிட்டன்ஸ்
ரூ. 2,50,000க்கு மேல் ஒருவர் சம்பாதிக்கிறார் என்றால் அவர் வருமான வரி செலுத்த வேண்டும். எனவே உங்களின் நிறுவனம் டி.டி.எஸ்-ஐ உங்களின் வருமானத்தில் இருந்து பிடித்தம் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பும். அத்தகைய வரி விதிக்கக்கூடிய வருமானம், கழிவுகள் மற்றும் டி.டி.எஸ் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய படிவம் 16 என அழைக்கப்படுகிறது. இதனை நிறுவனம் தங்களின் பணியாளர்களுக்கு வழங்குகிறது. இந்த ஆண்டு ஜூலை 15ம் தேதிக்கு முன்பு இந்த படிவத்தை பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
“இது ஐடிஆர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் ஐ.டி.ஆரை தாக்கல் செய்ய இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் முதலாளியிடம் நீங்கள் சமர்ப்பித்த விவரங்களின்படி இந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் இதில் இடம் பெறும். உங்கள் வரிவிதிப்பு வருமானம் படிவம் 16 இல் உள்ளதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், உங்கள் உரிமைகோரல்களுக்கு எதிராக ஆவண சான்றுகள் உங்களிடம் இருக்கும் என்று துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய மற்றும் புதிய வருமான வரி செலுத்தும் முறைகள்
இந்த ஐ.டி.ஆரிலிருந்து (2020-21 நிதியாண்டில்), வரி செலுத்துவோருக்கு பழைய வரி விகிதங்களுக்கும் புதிய வரி விகிதங்களுக்கும் இடையில் தேர்வு செய்ய விருப்பம் வழங்கப்படுகிறது. புதிய வரி முறைகள் பழைய வரிகளைக் காட்டிலும் குறைவானது. ஆனாலும் நீங்கள் புதிய வரி முறைகளை தேர்வு செய்தால் உங்களால் வேறெந்த வரிச் சலுகைகளையும் பெற முடியாது. உங்களின் வரி பொறுப்பு குறைவாக இருக்கும் வரி செலுத்தும் முறையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். புதிய வரி ஆட்சியின் தேர்வு குறிப்பாக ஐடிஆர் படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
குறிப்பிட்ட வரிச் சலுகைகள்
சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு சில முக்கியமான வரிச் சலுகைகள் உள்ளன. இவை ரூ .50,000 நிலையான கழித்தல், கல்வி கொடுப்பனவு, செலவு தொடர்பான கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு கொடுப்பனவுகள் அடங்கும். மிக முக்கியமான கொடுப்பனவு ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) ஆகும், இது உங்கள் ஐ.டி.ஆரில் கவனமாக கணக்கிடப்பட வேண்டும். பி.எஃப், கிராச்சுட்டி மற்றும் என்.பி.எஸ் மீதான சலுகைகளும் முக்கியமானது.
எல்.டி.சி. வவுச்சர் திட்டம்
2020-21 நிதியாண்டில், அரசு மற்றும் தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான விடுப்பு பயண கொடுப்பனவுக்கான (Leave Travel Allowance ) கோரிக்கைகள் தொடர்பான விதிகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நீங்கள் பயணம் மேற்கொள்ளவில்லை என்றாலும், நீங்கள் எல்.டி.சி. வவுச்சர்களை பயன்படுத்தி அதற்கான விலக்குகளை கோர முடியும். வரி விலக்குக்கான அதிகபட்ச வரம்பு ஊழியரின் குடும்பத்தில் ஒரு நபருக்கு ரூ .36, 000 அல்லது அத்தகைய ஜிஎஸ்டி பொறுப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எது குறைவானதோ அதில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
தாமதமாக ஐ.டி.ஆர் தாக்கல் செய்தால் அபராதம்
இந்த ஆண்டு, ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான தேதி 2021 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டி.டி.எஸ் தொகையை ஈடுசெய்த பிறகு உங்கள் சுய மதிப்பீட்டு வரி ரூ .1 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஜூலை 31 க்கு அப்பால் தாக்கல் செய்ய வட்டி வசூலிக்கப்படலாம். ஆகையால், டி.டி.எஸ்-க்குப் பிறகும் உங்கள் வரிப் பொறுப்பு ரூ .1 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஜூலை 31-க்கு முன் உங்கள் ஐ.டி.ஆரை தாக்கல் செய்வது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.