மூத்த குடிமக்கள் மற்றும் இதர வைப்பாளர்களுக்கான நிலையான வைப்பு விகிதத்தை வங்கிகள் கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகின்றன. இந்த வாரம், டிபிஎஸ் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை FD விகிதங்களை உயர்த்தின.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நவம்பர் 25 முதல் FD விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்தப் பொதுத்துறை வங்கியானது வழக்கமான வைப்புதாரர்களுக்கு முறையே 800 நாட்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான FDகளுக்கு 7.3% வரை வட்டி வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் இந்த தவணைகளுக்கு 7.8% வட்டியைப் பெறலாம். அதாவது, வங்கி அவர்களுக்கு 0.5% கூடுதல் வட்டியை வழங்குகிறது.
இதற்கிடையில், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு FD மீது 8.75% வரை வட்டி வழங்குகிறது. அதே நேரத்தில் யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 9% வரை வட்டி வழங்குகிறது.
ஆர்.பி.எல். வங்கி
RBL வங்கி 725 நாட்கள் வைப்புத்தொகைக்கு 7.75% வட்டியை மூத்த குடிமக்களுக்கு வழங்குகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India)
பாங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு நவம்பர் 1, 2022 முதல் 777 நாள்கள் வைப்புத்தொகைக்கு 7.75% வட்டியை வழங்குகிறது.
பெடரல் வங்கி (Federal Bank)
ஃபெடரல் வங்கி மூத்த குடிமக்களுக்கு அக்டோபர் 10, 2022 முதல் 750 நாட்கள் வைப்புத்தொகைக்கு 7% வட்டியை வழங்குகிறது.
யெஸ் வங்கி (Yes Bank)
யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 36 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.5% வட்டி வழங்குகிறது.
வங்கி 1.5 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. இது, நவம்பர் 3, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி
IDFC First Bank மூத்த குடிமக்களுக்கு 750 நாட்களுக்கான டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 7.75% வட்டியை வழங்குகிறது. 501 நாட்கள் முதல் 749 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.25% வட்டியை வங்கி வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil