Advertisment

மோசமான வங்கிக்காக ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

FM Sitharaman announces Rs 30,600 crore govt guarantee for ‘bad bank’: மோசமான கடன் தீர்வின் ஒரு பகுதியாக தேசிய சொத்து மறுசீரமைப்பு கம்பெனி லிமிடெட் (என்ஏஆர்சிஎல்) வழங்கிய பாதுகாப்பு ரசீதுகளுக்கு, 30,600 கோடி ரூபாய் வரை அரசு உத்தரவாதத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மோசமான வங்கிக்காக ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் மோசமான கடன்களின் விளைவாக,  அதிகரித்த செயல்படாத சொத்துகள் (NPAs) பிரச்சனையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், நாட்டின் முதல் 'மோசமான வங்கியை' உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை கூறினார்.

Advertisment

மோசமான கடன் தீர்வின் ஒரு பகுதியாக தேசிய சொத்து மறுசீரமைப்பு கம்பெனி லிமிடெட் (என்ஏஆர்சிஎல்) வழங்கிய பாதுகாப்பு ரசீதுகளுக்கு, 30,600 கோடி ரூபாய் வரை அரசு உத்தரவாதத்தை நிதியமைச்சர் அறிவித்தார்.

மேலும், "நேஷனல் அசெட் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் (என்ஏஆர்சிஎல்) வழங்கும் பாதுகாப்பு ரசீதுகளை ஆதரிக்க ரூ .30,600 கோடி வரையிலான மத்திய அரசு உத்தரவாதத்திற்கு, அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது," என்று நிதியமைச்சர் கூறினார்.

ஏற்கனவே உள்ள அழுத்தமான கடன்களை ஒருங்கிணைத்து எடுத்துக்கொள்வதற்கும் அதன் பிறகு நிர்வகிப்பதற்கும் சொத்து மேலாண்மை நிறுவனத்துடன் ஒரு சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தை (ARC) அமைப்பது மற்றும் அவற்றை அவற்றின் மதிப்புக்கேற்ப விற்பனை செய்வது, அரசாங்கத்தின் நோக்கம் என்று நிதியமைச்சர் சீதாராமன், 2021 பட்ஜெட்டில் அறிவித்தார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர், வங்கி இருப்புநிலைத் தாள்களை சுத்தம் செய்து முழுமையாக வழங்குவதற்காக, வங்கிகளின் சொத்து தர ஆய்வு 2015-ல் நடந்தது, ஆய்வு NPA- களின் மிக அதிக நிகழ்வுகளை வெளிப்படுத்தியது. இதனையடுத்து அரசாங்கம் அங்கீகாரம்,  தீர்மானம், மறு மூலதனம் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகிய நான்கு-R (Recognition, Resolution, Recapitalisation and Reforms) வியூகங்களைக் கொண்டு வந்தது என்று கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட பிறகு, NPA களை அளவிடும் பணி திட்டமிட்ட முறையில் தொடங்கியது அதேநேரம் NPA களை மீட்கும் பணியும் தொடங்கியது, கடந்த ஆறு நிதி ஆண்டுகளில், இந்த 4R கள் மிகச்சிறப்பாக நிறைவேற்றப்பட்டன, இதன் மூலம் வங்கிகள் ரூ .5,01,479 கோடியை மீட்டுள்ளன என்று நிதியமைச்சர் சீதாராமன் கூறினார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் வங்கிகளால் மீட்கப்பட்ட ரூ. 5,01,479 கோடியில், 2018 மார்ச் முதல் ரூ. 3.1 லட்சம் கோடி மீட்கப்பட்டுள்ளது, 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் 1.2 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது என்று நிதியமைச்சர் கூறினார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் வங்கிகளால் மீட்கப்பட்ட ரூ. 5,01,479 கோடியில், 99,996 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட சொத்துகளிலிருந்து மீட்கப்பட்ட தொகையாகும்.

கடந்த சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய வங்கி சீர்திருத்தங்கள் பற்றி பேசுகையில், நிர்வாக சீர்திருத்தங்கள், கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருதல், முதன்மை கூட்டுறவு வங்கிகளுக்கான மேற்பார்வை கட்டமைப்பு, வங்கி வாரிய பணியகம், ஏஆர்சி, இடர் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்தல் மற்றும் மூலதனச் சந்தைகளில் இருந்து வேண்டுமென்றே தவறியவர்களைத் தடுப்பது ஆகியவற்றைப் பற்றி நிதியமைச்சர் பேசினார்.

NPA களின் அதிகரித்த நிலைக்கு, 100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய மோசடிகளின், மோசடி கண்டறிதலுக்கான சராசரி பின்தங்கிய நேரம் 57 மாதங்களாக இருப்பது ஒரு காரணம் என்று நிதியமைச்சர் சீதாராமன் விளக்கினார்.

பொதுத்துறை கடன் வழங்குபவர்களின் வலிமை குறித்து பேசிய நிதியமைச்சர், 2018 ஆம் ஆண்டில் 21 பொதுத்துறை வங்கிகளில் (PSBs) இரண்டு மட்டுமே லாபகரமானதாக இருந்தது என்றும், ஆனால் தற்போது 2020-21 ஆம் ஆண்டில் 2 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே நஷ்டத்தில் இருப்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

மேலும், பொதுத்துறை வங்கிகள் இப்போது லாபம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், சந்தைகளில் இருந்து பணம் திரட்டுகின்றன என்றும், பொதுத்துறை வங்கிகளால் கடன் மற்றும் பங்கு என மொத்தம் ரூ .58,697 கோடி திரட்டப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார்.

NARCL ஆனது NPA களை வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புகளில் (முழு ஒதுக்கீடு செய்யப்பட்டது) ஒருங்கிணைத்து அவற்றை நிர்வகித்து தொழில் ரீதியாக அகற்றும். மேலும், இது வங்கிகளின் இருப்புநிலைகளை சுத்தம் செய்யும் என்று நிதியமைச்சர் கூறினார்.

"என்ஏஆர்சிஎல் உடன், நாங்கள் இந்திய கடன் தீர்வுக் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தையும் நிறுவுகிறோம், பொதுத்துறை வங்கிகளுக்கு என்ஏஆர்சிஎல் -ல் 51 சதவிகித உரிமை இருக்கும், அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொது நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 49 சதவிகித பங்குகளைக் கொண்டிருக்கும்," என்றும், சில மதிப்பீடுகளின் அடிப்படையில் NPA க்காக வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையில் 15% ரொக்கப் பணமாகவும், 85 சதவீதம் பாதுகாப்பு ரசீதுகளாகவும் இருக்கும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு ரசீதுகளின் மதிப்பு தந்திரமாக இருக்க வேண்டும், இதற்கு அரசாங்கம் ஆதரவு கொடுக்க வேண்டும், எனவே அரசாங்கத்தின் உத்தரவாதமான ரூ. 30,600 கோடிக்கு நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ரசீதின் அசல் மதிப்பு மற்றும் தீர்மானம் அல்லது கலைப்பு ஆகியவற்றுடன் உண்மையான மதிப்பை அறிதல் ஆகியவற்றுக்கு இடையேயான பற்றாக்குறையை சந்திக்க அரசு உத்தரவாதத்தை என்ஏஆர்சிஎல் மூலம் பெறலாம்.

"NARCL அமைத்தல் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், 2015 ஆம் ஆண்டில் இரட்டை இருப்புநிலைப் பிரச்சனையுடன் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த, இந்திய வங்கித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் முழுவதுமாக நிவர்த்தி செய்தோம். மேலும், அழுத்தமான சொத்துக்களைத் தீர்ப்பதற்கான ஒரு வழி இப்போது எங்களிடம் உள்ளது” என்று நிதியமைச்சர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nirmala Sitharaman Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment