Advertisment

வரலாறு காணாத தங்கம் விலை.. சவரன் ரூ, 25,000 ஐ நெருங்கியது!

வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக ஏற்றம் கண்டிருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

சென்னையில் தங்க விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து 25,000 ரூபாயை எட்டியுள்ளது.

Advertisment

சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஜனவரி 15ம் தேதி பொங்கல் நாளில் ஒரு கிராம் தங்கம் புதிய உச்சமாக 3,111 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை சற்றே குறைத்து வந்த நிலையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நேற்று 3,092 ரூபாயாக இருந்த ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ.3,121 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.... இந்த தகவல் உங்களுக்குத்தான்!

அதாவது ஒரே நாளில் சவரன் ஒன்றிற்கு 232 ரூபாய் அதிகரித்து 24,968 ரூபாயாக உயர்ந்துவிட்டது. இன்னும் 32 ரூபாய் கூடினால் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.25,000 வந்துவிடும். வரும் நாட்களில் விலை மேலும் உயரலாம் என்பதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக ஏற்றம் கண்டிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி, 1 ரூபாய் விலை உயர்ந்து ரூ.43.20 க்கு விற்பனையாகிறது.

இனி கவலையே இல்லை...பான் கார்டு தொலைந்தால் ஈஸியாக எப்படி வாங்கலாம் தெரியுமா?

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment