Advertisment

143 பொருட்களின் விலையை உயர்த்த முடிவு… மாநிலங்களிடம் கருத்து கேட்கும் ஜிஎஸ்டி கவுன்சில்

143 பொருட்களில், 92 சதவீதம் பொருள்கள் 18 சதவீத வரி ஸ்லாப்பில் இருந்து அதிகப்பட்சமாக 28 சதவீத ஸ்லாப் வரை மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. என்னென்ன பொருள்கள் விலை உயர போகிறது என்பதை இங்கே காணலாம்

author-image
WebDesk
New Update
ரூ.86,912 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக விடுவித்தது மத்திய அரசு; தமிழகத்திற்கு ரூ.9602 கோடி விடுவிப்பு

வருவாயை உயர்த்துவதற்காக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கீழ் முன்மொழியப்பட்ட விகிதத்தின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி கவுன்சில் 143 பொருட்களுக்கான விகிதங்களை உயர்த்துவதற்கான மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது.

Advertisment

அதில், பப்படம், வெல்லம், பவர் பேங்க், கைக்கடிகாரங்கள், சூட்கேஸ்கள், கைப்பைகள், வாசனை திரவியங்கள், கலர் டிவி செட்கள் (32 இன்ச் கீழே), சாக்லேட்டுகள், சூயிங்கம், வால்நட், கஸ்டர்ட் பவுடர், ஆல்காஹால் அல்லாத பானங்கள், செரமிக் சிங்க், வாஷ் பேசின், கண்ணாடிகள், கண்ணாடி பிரேம்கள், தோல் ஆடைகள், சாதாரண ஆடைகளும் இடம்பெற்றிருப்பதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

இந்த 143 பொருட்களில், 92 சதவீதம் பொருள்கள் 18 சதவீத வரி ஸ்லாப்பில் இருந்து அதிகப்பட்சமாக 28 சதவீத ஸ்லாப் வரை மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட விகித மாற்றங்கள், 2019 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, நவம்பர் 2017, டிசம்பர் 2018 இல் நடைபெற்ற கவுன்சில் மீட்டிங்கில் விகிதக் குறைப்பு முடிவுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2017 கவுகாத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் வாசனை திரவியங்கள், தோல் ஆடைகள், அணிகலன்கள், சாக்லேட்டுகள், கோகோ பவுடர், அழகு அல்லது மேக்கப் தயாரிப்புகள், பட்டாசுகள், பிளாஸ்டிக்கின் தரை உறைகள், விளக்குகள், ஒலிப்பதிவு கருவிகள் போன்ற பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. இப்போது மீண்டும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

இதேபோல், கலர் டிவி செட் மற்றும் மானிட்டர்கள் (32 இன்ச் கீழே), டிஜிட்டல் மற்றும் வீடியோ கேமரா ரெக்கார்டர்கள், பவர் பேங்க்கள் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் டிசம்பர் 2018 கூட்டத்தில் குறைக்கப்பட்டன, இப்போது அது மாற்றப்படலாம்.

பப்படம், வெல்லம் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திலிருந்து 5 சதவீத வரி ஸ்லாப்க்கு மாறலாம். தோல் ஆடைகள், அணிகலன்கள், கைகடிகாரங்கள், ரேஸர்கள், வாசனை திரவியங்கள், ஷேவ் செய்வதற்கு முன்/ஷேவ் செய்வதற்கு முந்தைய தயாரிப்புகள், பல் ஃப்ளோஸ், சாக்லேட்டுகள், வாஃபிள்ஸ், கோகோ பவுடர், மது அல்லாத பானங்கள், ஹெண்டபாக்/ஷாப்பிங் பேக்குகள். செராமிக் சிங்க், வாஷ் பேசின், பிளைவுட், கதவுகள், ஜன்னல்கள், மின் சாதனங்கள் (சுவிட்சுகள், சாக்கெட்டுகள்) ஆகியவற்றின் ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படலாம்.

அக்ரூட் பருப்புகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், கஸ்டர்ட் பவுடருக்கு 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், மேஜை மற்றும் சமையலறைப் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்படலாம்.

2017 இல் கவுகாத்தி கூட்டத்தில், 28 சதவீத ஸ்லாப்பில் 50 பொருட்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டு, 228 பட்டியலில் இருந்து 178 பொருட்கள், உணவகங்களுக்கான கட்டணக் குறைப்புடன் 75 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் மூலம் வருவாய் இழப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சில், 2017 கூட்டத்திற்கு பிறகு ஒர் ஆண்டிற்குள், ஒவ்வொரு நான்கு பொருட்களுக்கும் ஒரு விலையைக் குறைத்தது. ஜிஎஸ்டியின் கீழ் பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய ஐந்து பரந்த வகைகளில் மொத்தமுள்ள 1,211 பொருட்களில் 350க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான கட்டணத்தை குறைத்தது. இதன் மூலம், அரசுக்கு ஒரு ஆண்டிற்குள் 70 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சில் தற்போது விகிதத்தில் மாற்றத்திற்கான முன்மொழிவை மாநிலங்களின் உள்ளீடுகளைப் பெறுவதற்கு அனுப்பியுள்ளதாக அறியப்படுகிறது.

மாநில அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில், விகித மாற்றங்களுக்கான உள்ளீடுகளை மாநிலங்களிடம் கேட்கப்பட்டுள்ளன. உற்பத்தியாளர்கள் விகிதக் குறைப்புகளின் பலன்களை நுகர்வோருக்கு கிடைக்காத சில பொருட்களுக்கு விலை மாற்றத்தைக் காண வேண்டும். ஆனால், மற்ற பொதுவான உபயோகப் பொருட்களுக்கு, கட்டணங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றார்.

ஜிஎஸ்டி கவுன்சில் செயலகத்திற்கு தி சண்டே எக்ஸ்பிரஸ் அனுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட சந்தையின் திறமையின்மை காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அதிக விலை நிர்ணயம் செய்வதால், WPI பணவீக்கம் சில்லறை பணவீக்கமாக சரியும் ஒரு போக்கு இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி விற்பனையுடன் ஒப்பிடுகையில் மார்ச் 2021ல் 14.7 சதவீதம் உயர்ந்து. அதேபோல், மார்ச் 2020ல் 45.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment