எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தப்படியாக வீட்டுக்கடன் வசதியில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தை தரும் வங்கிகளாக ஐ.சி.ஐ.சி.ஐ.மற்றும் எச்.டி.எப்.சி. வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.3 சதவீதம் குறைத்துள்ளன.
பெரிய குடும்பம் தொடங்கி நடுத்தர குடும்பங்கள் வரை பலரின் கனவும் சொந்த வீடு தான். அதுவும் சென்னையில் சொந்த வீடு வாங்குபவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அப்படி கடன் வாங்கி, வீடு கட்டிய பிறகு அந்த கடனை அடைப்பது அதற்கு மேல் இருக்கும் சவால்கள். இன்றைய காலக்கட்டத்தில் வீடுக்கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தவர்கள் முதலில் நாடி செல்வது வங்கிகளை தான்.
உடனடியாக கடன் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
வங்கிகள் அளிக்கும் ஹோம்லோன் வசதி பலருக்கும் எளிமையான ஒன்று. இதன்படி ஐ.சி.ஐ.சி.ஐ.மற்றும் எச்.டி.எப்.சி. இந்த இரண்டு வங்கிகளிலும் புதிதாக வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை பெறும் பெண்களுக்கு வட்டி 8.35 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதம் வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ரூ. 30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை கடன் பெறும் பெறும் வாடிக்கையாளர்ளுக்கான வட்டி 8.50 சதவீதம் என்பதில் மாற்றமில்லை. ரூ.75 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 8.75 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ நெட் பேங்கிங் யூஸ் பண்ண்றீங்களா? நீங்கள் வங்கிக்கு கட்ட வேண்டிய தொகை இதுதான்!
வேலைக்குச் செல்லும் பெண்கள் ரூ.30 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றால், அவர்களுக்கு வட்டி 8.35 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதமும் வட்டி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.