இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்த வருடம் முதல் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 % உயர்த்தியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பொழுதும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டுமே வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்து. ஆனால் இதுவரையில் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. இருப்பினும் எச்டிஎப்சி இந்த அறிவிப்பை வெளியிட்டு வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்த கடன் திட்ட வட்டி விகித உயர்வு, மிதவை வட்டி முறையில் வீடு கடன் பெற்றவர்களின் தவணை செலவு அதிகரிக்கும். மேலும் இந்த வட்டி விகித உயர்வு ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எச்டிஎப்சி வங்கி நிர்வாகத்தின் எந்த முறையை பிற வங்கிகளும் பின்பற்ற வாய்ப்புகள் உள்ளது.
எச்டிஎப்சி- வாங்கி வழங்கி வந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு கடன், தற்போது 8.95 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. (பெண்களுக்கு 8.90%). 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடன் தற்போது 9.10 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 9.05%).