Advertisment

ஹோம் லோன் கட்டியாச்சு.. ஆனாலும் இந்த 5 ஸ்டெப்ஸ் ரொம்ப முக்கியம்..!

நிலுவைத் தொகைகள் அனைத்தையும் செலுத்திவிட்டீர்கள் என்றும், கடன் வழங்கும்போது அவர்களிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தின் மீது கடன் வழங்குபவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் No-Dues Certificate ஆவணம் கூறுகிறது.

author-image
Jayakrishnan R
New Update
how much extra interest you will pay on home personal and car loan EMIs

உயரும் பணவீக்கத்தை சமாளிக்க ரெப்போ விகிதம் முன்பு 5.9 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

அப்பாடா ஒரு வழியா, வாங்குன ஹோம் லோன்ன மாசாமாசம் EMI ஆக கட்டி முடிச்சாச்சு. இனி என்ன பாக்கி இருக்க போகுது? நம்ம வீடு இப்போதான் நமக்கான வீடா முழுசா மாறியிருக்கு.. அப்படினினு இந்த 5 விஷயத்தை மட்டும் மறந்தீடாதீங்க.

அது என்ன 5 விஷயம். வாங்க பார்க்கலாம்.

Advertisment
  1. அசல் ஆவணங்களை திரும்ப பெறுதல்

    வங்கியோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களோ, பிரத்யேக ஹோம் லோன் கடன் நிதியங்களோ, யாராக இருந்தாலும் உங்களுக்கு கடன் கொடுக்கும்போது, உங்களின் வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டுதான் பணம் கொடுப்பார்கள்.

    ஆகவே நீங்கள் ஹோம் லோன்-ஐ முடிக்கும்போது வீட்டுப் பத்திரம், பில்டர் ஒப்பந்தம், ஒதுக்கீடு கடிதம், உடமை கடிதம் இப்படி எது அசல் அளித்திருந்தாலும் அதனை கவனமாக சரிபார்த்து திரும்ப பெறுங்கள். இதனை பக்கம் பக்கமாக சரி பார்த்தல் கூட தவறில்லை.
  2. நிலுவைத் தொகை இல்லை என்ற சான்றிதழைப் பெறுங்கள் (No-Dues Certificate)

நிலுவைத் தொகை இல்லாத சான்றிதழ் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். உங்கள் வீட்டுக் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய உடனேயே கடனளிப்பவரிடமிருந்து அதை பெற வேண்டும்.

நிலுவைத் தொகைகள் அனைத்தையும் செலுத்திவிட்டீர்கள் என்றும், கடன் வழங்கும்போது அவர்களிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தின் மீது கடன் வழங்குபவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் இந்த ஆவணம் கூறுகிறது.

ஆகையால் இந்த ஆவணத்தில் பெயர், முகவரி உள்ளிட்டவை சரியாக உள்ளதா என மிக மிக கவனமாக சரிபார்ப்பது நல்லது. ஏனெனில் இது சட்டப்பூர்வ ஆவணம் ஆகும்.

  1. சொத்து மீதான உரிமையை அகற்றவும்

நீங்கள் ஒரு வீட்டை வாங்குவதற்கு கடன் வாங்கும்போது கடன் வழங்குபவர்கள் சொத்துக்கு ஒரு உரிமையாளராக கோருகிறார். இது கடனளிப்பவரின் உரிமைகளைப் பாதுகாக்கிறது மற்றும் அடமானம் முழுமையாக செலுத்தப்படும் வரை கடன் வாங்கியவர் சொத்தை விற்பதைத் தடுக்கிறது.

எனவே உங்கள் சொத்தில் முழுமையான உரிமையை அனுபவிக்க, உரிமையை அகற்றுவதை உறுதிசெய்யவும். உரிமை நீக்கப்பட்ட பிறகு, நீங்கள் சொத்தை தொந்தரவு இல்லாமல் விற்கலாம்.

  1. கட்டுப்பாடற்ற சான்றிதழ் (Non-Encumbrance Certificate)

சொத்து தொடர்பான அனைத்து நிதி பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் என்கம்பரன்ஸ் சான்றிதழில் கொண்டுள்ளது. ஆகவே கட்டுப்பாடற்ற சான்றிதழ் என்பது ஒரு சொத்துக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட சுமைகள் எதுவும் இல்லை என்று அறிவிக்கும் சட்டப்பூர்வ ஆவணமாகும்.

நீங்கள் கடனை திருப்பி செலுத்திய பின்னர் அந்த விவரங்கள் இதில் உள்ளனவா? என சரிபார்ப்பது மிக மிக அவசியம்.

  1. உங்கள் கடன் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்

நீங்கள் எந்த வகையான கடனை வாங்கினாலும், அது உங்கள் கிரெடிட் பதிவுகளில் பிரதிபலிக்கும். இது உங்கள் புதிய கடன்களை பாதிக்கிறது. ஆகவே உங்கள் கடன் பதிவுகளை புதுப்பித்துக்கொள்வது நல்லது.

உங்கள் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் கடன் அறிக்கையை தவறாமல் சரிபார்க்கலாம்.

வீட்டுக் கடனைத் தீர்ப்பது என்பது பல கடன் வாங்குபவர்களுக்கு பெருமைக்குரிய விஷயமாகும், ஆனால் கடன் வழங்குபவர் அதன் பதிவில் தவறுகளைச் செய்தால், மேற்கூறிய கவனத்துடன் கூடிய நடவடிக்கைகளைப் புறக்கணிப்பது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment