Advertisment

PM Kisan News: ஆண்டுக்கு ரூ6000; 10-வது தவணை உங்க அக்கவுண்டில் சேர்ந்து விட்டதா... செக் செய்வது எப்படி?

How to check PM Kisan 10th installment and beneficiary details: பிரதமர் கிசான் திட்டம் 10 ஆவது தவணை; உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துக்கொள்வது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிஎம் கிசான் 11-வது தவணை; விவசாயிகளுக்கான முக்கிய அப்டேட் இதோ…

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 10ஆவது தவணை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிகிறது.

Advertisment

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை ஒன்பது தவணைகள் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 10வது தவணை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என தெரிகிறது.

நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த நிதியுதவி ஆண்டிற்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2000 விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் விவசாயிகளின் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தரவுத்தளத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் நிலப் பதிவேடு விவரங்கள் உள்ளன.

பிரதமர் கிசான் திட்டத்தின் 10வது தவணையைச் சரிபார்ப்பதற்கான படிகள் இங்கே:

படி 1 - அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்லவும்

படி 2 - இப்போது முகப்புப்பக்கத்தில் ‘விவசாயிகளின் பகுதி’ (Farmer’s Corner section) என்பதை கிளிக் செய்யவும்.

படி 3 - 'பயனாளி நிலை' (Beneficiary status) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே, பயனாளி தனது விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம். அந்தப் பட்டியலில் விவசாயியின் பெயர் மற்றும் நிதியுதவி அனுப்பப்படும் அவரது வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும்.

படி 4 - இப்போது உங்கள் ஆதார் எண் அல்லது கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.

படி 5 - பின்னர் 'தரவைப் பெறு' (Get Data) என்பதைக் கிளிக் செய்யவும்

இப்போது உங்களுக்கான தகவல்கள் கிடைக்கப்பெறும்.

PM கிசான் பயனாளி நிலையை சரிபார்ப்பது எப்படி?

'பிஎம் கிசான் பயனாளிகள் பட்டியலை' சரிபார்க்க, மேலே குறிப்பிடப்பட்ட இணையதள பக்கத்தில் விவசாயிகள் பகுதிக்குச் (Farmer’s Corner section) சென்று பயனாளிகளின் பட்டியலைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை உள்ளிடவும். அதன் பிறகு Get report என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது பயனாளியின் விவரங்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.

PM கிசான் திட்டத்தின் 10வது தவணை நிலையை சரிபார்ப்பது எப்படி?

படி 1: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

படி2: இணையதளத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள 'விவசாயிகள் பகுதி' (Farmer’s Corner section) பிரிவில் உள்ள 'பயனாளி நிலை' (Beneficiary status) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

படி 3: இப்போது தோன்றும் பக்கத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மூன்று எண்களின் உதவியுடன், நீங்கள் பிரதமர் கிசான் தொகையைப் பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதையும் நீங்கள் சரிபார்க்கலாம்.

படி 4: இந்த மூன்று எண்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் விவரங்களை நிரப்பவும்.

படி 5: இந்த எண்ணைக் கிளிக் செய்யும் போது அனைத்து பரிவர்த்தனைகளையும் பெறுவீர்கள். மேலும், PM கிசான் 10வது தவணை தொடர்பான தகவல்களையும் பெறுவீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pm Kisan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment