ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்ற வங்கி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று.
இது வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேமிப்பு கணக்கை மூடினால் கட்டணம் வசூலிக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து வாடிக்கையாளர்கள் தப்பிக்க இதுதான் சிறந்த வழி.எஸ்பிஐ வங்கி பெரும்பாலான மக்கள் கணக்கை மூட செய்வதை விரும்புவதில்லை. ஆனால் கடந்த எஸ்பிஐ மினிமல் பேலன்ஸ் இல்லாத வங்கி கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மிகப் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு அளித்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி கணக்கை மூட முடிவு செய்தனர். ஆனால் கணக்கை முழுமையாக மூடிட நீங்கள் வங்கி நிர்வாகத்திற்கு கட்டணம் கட்ட வேண்டும் . எஸ்பிஐ வங்கியில் இருக்கும் சேமிப்பு கணக்குகளை மூட வேண்டும் என்றால் கணக்கு திறக்கப்பட்ட 14 நாட்கள் தவிர அனைத்து நிலைகளிலும் 500 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குறைந்தபட்ச இருப்பு அளவின் மூலம் அவதிப்படும் மக்கள் எவ்விதமான
தயக்கமுமின்றி எஸ்பிஐ வங்கி கணக்கை மூடிக்கொள்ளலாம். வங்கியில் சேமிப்பு கணக்கு திறக்கப்பட்ட 14நாட்கள் முதல் 1 வருடம் காலம் ஆன கணக்குகளை மூடும் போது 500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். மேலும் பிற எந்த காரணத்திற்காகவும் கணக்கை மூடினால் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.