பொதுத்துறை வங்கிகளில் முன்னணியில் உள்ள இந்தியன் வங்கி, வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப பெர்சனல் லோன், வீட்டுக்கடன், கல்விக்கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடன்களை வழங்கி வருகிறது.
கடன்களை, தங்களது வாடிக்கையாளர்களுக்கு எளிய நடைமுறையில் வழங்குவதில், இந்தியன் வங்கிக்கு நிகர் இந்தியன் வங்கி தான், அந்தளவிற்கு இந்தியன் வங்கியின் கடன் வழங்கும் முறைகள் எளிமையாக உள்ளது.
இந்தியன் வங்கியின் பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து இங்கே பார்க்கலாம்...
எப்பொழுதும் கார் அல்லது வீடு வாங்க பணம் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும். கடனை திருப்பிச்செலுத்தவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும்.
இந்நிலையில்,பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
1. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, போன்ற வங்கிகள் 1 லட்சம் வரைக்கும்தான் பெர்சனல் லோனை எந்த காரணமும் கேட்காமல் தருகின்றன.
2. 10 லட்சம் வரைதான் ஆக்ஸிஸ் பேங்க்,ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை வங்கிகள் கடனைத் தருகின்றன. அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
3. மேலும் குறைவான ஆவணங்கள் கொடுத்து பெர்சனல் லோன் வாங்க முடியும். இருப்பிடம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாதங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம்.