Advertisment

ரூ. 210 முதலீட்டில் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கும் சிறந்த முதலீட்டு திட்டம்; விபரங்கள் இதோ…

Invest rs 210 get rs 5000 pension; atal pension yojana details here: மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் பெற ரூ. 210 முதலீடு செய்தால் போதும்; அடல் பென்சன் திட்டத்தின் விவரங்கள் இதோ...

author-image
WebDesk
New Update
ரூ. 210 முதலீட்டில் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கும் சிறந்த முதலீட்டு திட்டம்; விபரங்கள் இதோ…

நிலையான வருமானம் உள்ளவர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் நல்ல ஓய்வூதியம் பெற சிறந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். எல்லோருக்கும் நிச்சயம் ஓய்வூதியம் தேவைதான். ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை உறுதி செய்யும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்யலாம்.

Advertisment

சம்பளதாரர்களுக்கு ஓய்வூதியம் என்பது அவசியமாகும். தங்கள் ஓய்வுகாலத்தில் நிலையான வருமானம் பெற ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்வது நல்ல யோசனை. ஓய்வூதிய திட்டங்களை தேர்ந்தெடுக்கும்போது, நமக்கு தேவையான சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அப்படியான சிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்று மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா.

அடல் பென்ஷன் யோஜனா, முன்பு ஸ்வலம்பன் யோஜனா என்று அழைக்கப்பட்டது, இது அரசு ஆதரவு பெற்ற ஓய்வூதியத் திட்டமாகும், இது பிரதமர் நரேந்திர மோடியால் 9 மே 2015 அன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

சுரங்கம், உற்பத்தி, கட்டுமானம் போன்ற அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மற்றும் 18-40 வயதிற்குள் இருக்கும் எந்த இந்தியனும் இந்த திட்டத்தின் பயனைப் பெறலாம். முதலீட்டாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அல்லது 60 வயதை அடைந்தவுடன் நன்மைகளைப் பெறத் தொடங்குவார்கள்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறக்கும் வரை மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறார்கள். ஒரு வேளை, முதலீட்டாளர் இறந்து, வாழ்க்கைத் துணை பிழைத்திருந்தால், அவர்கள் இறக்கும் வரை ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். முதலீட்டாளர் யாரும் உயிருடன் இல்லை என்றால், முழுத் தொகையும் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டவருக்கு மாற்றப்படும்.

அடல் பென்ஷன் திட்டத்தில், மாதம் ரூ 210 முதலீடு செய்வதன் மூலம் ரூ .5,000 ஓய்வூதியம் பெறலாம்.

முதலீட்டாளர்கள் அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியம் பெற விரும்புகிறார்கள் என்பதை தேர்வு செய்யலாம், இது குறைந்தபட்சம் 1,000 ரூபாய் அல்லது அதிகபட்சம் 5,000 ரூபாய்.

ஓய்வுக்குப் பிறகு முதலீட்டாளர் 5,000 ரூபாயைப் பெற விரும்பினால், அவர்கள் அடல் பென்ஷன் யோஜனாவில் மாதம் 210 ரூபாயுடன் 18 வயதில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். அதுபோல, 20 வயது முதலீட்டாளர்கள் ரூ .248 க்கு முதலீடு செய்ய வேண்டும். 25 வயது முதலீட்டாளர்கள் ரூ .376 க்கு முதலீடு செய்ய வேண்டும். வயதுக்கு ஏற்ப முதலீட்டுத் தொகை அதிகரிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pension Scheme Atal Pension Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment