iob schemes : பேங்குக்கு செல்ல வேண்டும், கால் கடுக்க க்யூவில் நிற்க வேண்டும் என புலம்பும் சீனியர் சிட்டிசன்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. இனி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. நீங்கள் ஒரு ஃபோன் செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வங்கி சேவை வருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வங்கி வருகிறது. குறிப்பாக கடன் திட்டங்களில் தொடங்கி, பிக்சட் டெபாசிட் சேவை வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைப்படி பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மூத்த குடிமக்களின் வைப்பு தொகைக்கு 0.50 சதவீத அதிக வட்டி, இலவச காசோலை, சேமிப்பு கணக்கு தரம் தானாக மாறும் வசதி, ஆயுள் சான்றை சுலபமாக சமர்ப்பிக்கும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்கெனவே வழங்கி வருகிறது.
அண்மையில் கடன் பரஸ்பர கூட்டம் நடத்தப்பட்டு அதன் மூலம் பல கடன்கள் நிலையில் இருந்த வட்டிகள் ஆகியவை சரிசெய்யப்பட்டு விட்டன.இப்போது நீங்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான வசதி என்றால் அது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செயல்பட்டு வரும் ஐஓபி 80 பிளஸ் திட்டம் தான்.
80 வயதை எட்டிய முதியோர்கள் 'ஐஓபி 80 பிளஸ்' என்ற சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின்படி வைப்புத் தொகைக்கு 0.25 சதவீத வட்டி கூடுதலாக கிடைக்கும். அதுமட்டு மல்லாமல் குறைந்தபட்ச இருப்பு தொகை ரத்து, இலவச தனிப்பட்ட காசோலை புத்தகம், இலவச எஸ்எம்எஸ் தகவல், இலவச டெபிட் கார்டு போன்றவற்றை வழங்கும்.
பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்க இருக்கீங்களா? அதுவும் ஐசிஐசிஐ வங்கியில்! உங்களுக்கு தான் இந்த செய்தி.
சில குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் வாடிக்கை யாளர்களாக உள்ள 70 வயதைக் கடந்த முதியோர்களுக்கு வீட்டு வாசலில் வங்கி சேவையை வழங்கும் திட்டத்தையும் ஐஓபி செயல்படுத்தி வருகிறது.