பல்வேறு அரசு வங்கிகள் தற்போது பணவீக்கத்தை குறைக்கும் உண்மையான வட்டி விகிதங்களை நிலையான வைப்புகளுக்கு (ஃபிக்ஸட் டெபாசிட்) வழங்குகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் & சிந்து வங்கி (PSB) அதிகபட்ச நிலையான வைப்பு வட்டி விகிதத்தை (8.85% வரை) வழங்குகிறது. இது, பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் வட்டி விகிதங்களை விட அதிகமாகும்.
300 நாள்கள் நிலையான வைப்பு திட்டம்
இந்தத் திட்டத்தின் கீழ், மிக மூத்த குடிமக்களுக்கு 8.35% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8% வட்டியும் வங்கி வழங்குகிறது. மற்ற வைப்பாளர்கள் 7.5% வட்டி விகிதத்தைப் பெறலாம்.
601 நாள்கள் நிலையான வைப்புத் திட்டம்
PSB-Fabulous Plus 601 நாட்கள் நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ், மிக மூத்த குடிமக்களுக்கு 7.85% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வங்கி வழங்குகிறது. மற்ற வைப்பாளர்கள் 7% வட்டி விகிதத்தைப் பெறலாம்.
1051 நாள்கள் நிலையான வைப்பு
PSB SRSD-1051 நாள்கள் நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.85% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வங்கி வழங்குகிறது. மற்ற வைப்பாளர்கள் 7% வட்டி விகிதத்தைப் பெறலாம்.
எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் டெர்ம் டெபாசிட்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டத்துக்கு 7.6% மற்றும் எஸ்பிஐ சர்வோத்தம் டெபாசிட் திட்டத்துக்கு 7.9% ஆகும்.
அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி மிக மூத்த குடிமக்களுக்கு அதிகபட்ச விகிதமாக 8.05% 666 நாள்கள் வைப்புத்தொகைக்கு வழங்குகிறது. இதில், மூத்த குடிமக்கள் 7.75% வட்டி பெறலாம்.
தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா 399 நாட்கள் பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/