life insurance tamil life insurance in tamil :ஆயுள் காப்பீட்டு பாலிசியை வாங்கியிருந்தாலும், புதிய பாலிசியை வாங்க திட்டமிட்டிருந்தாலும், நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
திடீர் விபத்துகளிலிருந்து நமது குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க நாம் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை எடுத்துக் கொள்கிறோம். இது ஒரு முதலீடாக இருந்தாலும், நமது மனதில் வரும் முதல் விஷயம் இந்த திட்டத்திற்கு ஏதாவது வரி சலுகைகள் இருக்குமா இல்லையா என்பதுதான். ஆம் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு வரி சலுகை உண்டு.
எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள முன்னனி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் முன்னனி உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான BNP Paribas Cardif ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு.
குழந்தைகள் கல்விக்கான தயாரிப்புகள், பராமரிப்பு இல்லாத ஓய்வூதிய திட்டம், நிதி பாதுகாப்பு, குடும்ப பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் வளம் உருவாக்குதல் போன்ற பல தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எஸ்பிஐ லைப் வழங்குகிறது.
ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசியை வாங்கும் முன், அவசரநிலை ஏற்படும் சமயத்தில் உங்களால் பணம் செலுத்த முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது காப்பீட்டு பயன்களை பெற வேண்டுமென்றால், முன்கூட்டியே ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இந்த தொகைக்கு பெயர் ‘deductibles’. உங்களது டிடக்டிபிள் தொகை உயர்வாக இருந்தால் பிரீமியத் தொகை குறையும். பிரீமியம் அதிகமாக இருந்தால் டிடக்டிபிள் தொகை குறையும்.
வருமான வரி சட்டம் (Income Tax Act, 1961) பிரிவு 80Cன் கீழ் வருமான வரி சலுகை / செலுத்தப்பட்ட பிரீமியம் மீதான விலக்கு கிடைக்கிறது. நிதியாண்டில் செலுத்தப்பட்ட பிரீமியம் காப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தைத் தாண்டினால், நன்மை உறுதி செய்யப்பட்ட தொகையில் 10 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil