Advertisment

இதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் - எச்சரிக்கும் ஆர்.பி.ஐ

RBI alerts link aadhar to pan card if fails you can do transactions: பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன ஆகும்? ஆர்பிஐ எச்சரிக்கை இதோ!

author-image
WebDesk
New Update
இதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் - எச்சரிக்கும் ஆர்.பி.ஐ

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. உங்கள் ஆதார் எண்ணுடன் உங்கள் பான் எண்ணை இணைக்க கடைசி தேதி 2021 ஜூன் 30 ஆகும். ஏற்கனவே இந்த இணைப்புக்கு மார்ச் 31 தான் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. ஜூன் 30 காலக்கெடு முடிய இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளதால், விரைவில் உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுங்கள்.

Advertisment

நிரந்தர கணக்கு எண் - பான் என்றால் என்ன?

ஒரு பான் என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பத்து இலக்க தனித்துவமான எண்ணெழுத்து எண். மக்கள் அதை லேமினேட் பிளாஸ்டிக் அட்டை வடிவில் வைத்திருக்கின்றனர்.

நீங்கள் PAN ஐ ஆதார் உடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் நீங்கள் இணைக்க தவறினால், பான் அட்டை செயல்படாது என்று மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இருப்பினும் காலக்கெடு முடிந்தபின்னர் பயனர்கள் தங்கள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைத்தால், பான் அட்டை "ஆதார் எண்ணைத் தெரிவித்த நாளிலிருந்து செயல்படும்" என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

2021 ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் 234 ஹெச் என்ற புதிய பகுதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த பிரிவின் கீழ், காலக்கெடு தேதிக்குப் பிறகு ஒரு பான் அட்டை ஆதார் உடன் இணைக்கப்படவில்லை என்றால், அபராதம் வசூலிக்க முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

234 ஹெச் படி, பான் 2021 ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு ஆதார் உடன் இணைக்கப்பட்டிருந்தால், அந்த நபர் ரூ .1,000 க்கு குறையாமல் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்.

பான் அட்டையின் தேவை என்ன?

பான் கட்டாயமாக தேவைப்படும் சூழ்நிலைகளை நாம் இப்போது பார்போம். இந்த சூழ்நிலைகளில் உங்கள் பான் எண் செயல்படாவிட்டால் உங்களால் மேற்கொண்டு அந்த பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.

வங்கி வரைவுகள், ஊதிய ஆர்டர்கள், அல்லது ஒரு வங்கி நிறுவனம் அல்லது ஒரு கூட்டுறவு வங்கியிடமிருந்து வங்கியாளரின் காசோலைகள் வாங்குவதற்காக ஒரு நாளில் ரூ .50,000 க்கும் அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டி இருந்தால் நீங்கள் பான் எண்ணை உங்கள் சாலானில் கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.

நீங்கள் வங்கியில் ரூ. 50000க்கும் அதிகமாக பணம் செலுத்த அல்லது எடுக்கவும் பான் எண் தேவை.

பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க பான் அவசியம்.

பணப்பரிவர்த்தனைகளுக்குப் பயன்படும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்க பான் கட்டாயம் தேவை.

வைப்புத்தொகை, பங்கேற்பாளர், பத்திரங்களின் பாதுகாப்பு உடன் கூடிய டிமேட் கணக்கைத் திறக்க அல்லது செபியுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் பான் கட்டாயம் வேண்டும்.

கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்களைப் பெறுவதற்கு ஒரு நிறுவனம் அல்லது அமைப்புகளுக்கு ரூ .50,000 க்கும் அதிகமான தொகையை செலுத்த பான் கட்டாயம் தேவை.

இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பத்திரங்களை வாங்குவதற்காக ரூ .50,000 க்கும் அதிகமான தொகையை செலுத்தவும் பான் எண் அவசியம்.

மோட்டார் வாகனம் அல்லது இரு சக்கர வாகனம் இல்லாத எந்தவொரு வாகனத்தையும் வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ பான் தேவைப்படும்.

ஒரு ஹோட்டல் அல்லது உணவகங்களில் ரூ .50,000 க்கும் அதிகமான தொகையை செலுத்த பான் எண் தேவைப்படும்.

எந்தவொரு வெளிநாட்டிற்கும் பயணம் செய்வது தொடர்பாக ரூ .50,000 க்கும் அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்த நேரிட்டால் உங்களுக்கு பான் எண்ணின் தேவை நிச்சயம் உண்டு.

உங்கள் பான் கார்டு செயல்படவில்லை என்றால், மேற்கண்ட இடங்களில் கட்டாயமாக நீங்கள் நிதி பரிவர்த்தனைகளை நடத்த முடியாது. எனவே உடனே உங்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pan Card Aadhar Pan Link Aadhaar Card Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment