Advertisment

பிசினஸ் தொடங்கப் போறீங்களா? அரசு வழங்கும் டாப் 5 லோன்கள் இவை!

இந்த திட்டம் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பிணையம் எதுவும் கேட்காமல் லோனை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
loan, scams, பண மோசடி

தொழில் தொடங்குவதில் எல்லோருக்கே ஆர்வம் இருக்கும். சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பது கனவாக மட்டுமே இருக்கும். ஆனால், பொருளாதார ரீதியாக ஆதரவு தர யாரும் இல்லாததால் அவர்களின் கனவு நனவாகாமல் அப்படியே மனதில் இருக்கும்.

Advertisment

அப்படிப்பட்டவரில் ஒருவரா நீங்கள்? உங்களுக்காகதான் இந்தக் கட்டுரை.

தொடர்ந்து படியுங்கள். நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு வகையான திட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்துள்ளது.

பல்வேறு தொழில்களை ஊக்குவிப்பதற்காக தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் நிதிசார்ந்த உதவிகளை மத்திய அரசு செய்ய முன்வந்துள்ளது.

எந்தவொரு தொழிலுக்கும் நிதி என்பது அடிப்படையானதாகும்.

அது சிறு தொழிலாகவும் இருக்கலாம் அல்லது பெரு நிறுவனங்களாகவும் இருக்கலாம்.

 2022 ஆம் ஆண்டில் டாப் 5 அரசு லோன்கள் :

எம்எஸ்எம்இ லோன்

செயல்பாட்டு மூலதன லோனை மையமாகக் கொண்டு மத்திய அரசாங்கத்தால் இந்த லோன் அறிமுகப்படுத்தப்பட்டது

ரூ.1 கோடி நிதியுதவியுடன் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வணிகங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.

விண்ணப்பம் பெறப்பட்ட 59 நிமிடங்களுக்குள் ஒப்புதல் செய்யப்படுகிறது.

இந்த லோனுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம்.

மகளிர் தொழில்முனைவோர் இட ஒதுக்கீடு: 3 சதவீதம்

கடன் செயலாக்க நேரம்: 8 முதல் 12 நாட்கள்

கடன் உத்தரவாத நிதி திட்டம்

இந்த திட்டம் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பிணையம் எதுவும் கேட்காமல் லோனை வழங்குகிறது.

செயல்பாட்டு மூலதனக் கடன்கள்: ரூ. 10 லட்சம் பிணையம் இல்லாமல் லோன்கள் வழங்கப்படுகிறது.

பிணையம்: நிலம் மற்றும் கட்டிடங்கள் போன்ற சொத்துக்களின் முதன்மை பிணையம் மற்றும் அடமானம்.

முத்ரா லோன்

 சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் லோன் தருவதற்கான முன்முயற்சியை முத்ரா எடுத்துள்ளது.

 உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறையில் செயல்படும் சிறு அல்லது குறு வணிக நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், சிறு வங்கிகள், திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் கடன் பதிவு செய்யப்படுகிறது.

முத்ரா கடன் மூன்று பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது:

சிஷு கடன்கள்: ரூ.50,000

கிஷோர் கடன்கள்: ரூ.5,00,000

தருண் கடன்கள்: ரூ.10,00,000

கடன் இணைப்பு மூலதன மானியத் திட்டம்

இந்தக் கடனில் உங்கள் வணிகத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கான நிதியும் அடங்கும். அடிப்படையில், உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற பல்வேறு செயல்முறைகளை மறுசீரமைக்கப் பயன்படுகிறது.

SME களை உருவாக்குவதற்கும் பொருட்களை வழங்குவதற்கும் உற்பத்திச் செலவும் குறைக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் தகுதியான வணிகங்களுக்கு சுமார் 15 சதவீத மூலதன மானியத்தை வழங்குகிறது.

கடன் வரம்பு: ரூ 15 லட்சம்

தகுதி: உரிமையாளர் வணிகம், கூட்டாண்மை நிறுவனம், கூட்டுறவு அல்லது தனியார் மற்றும் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும்.

தேசிய சிறுதொழில் கழக மானியம்: இந்த மானியம் மூலப்பொருள் உதவித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதாகும். அங்கு வணிகத்திற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விலைக்கு வணிகம் நிதியளிக்க முடியும்.

சந்தைப்படுத்தல் உத்தியுடன், வணிக சலுகைகளுக்கான போட்டி சந்தை மதிப்பை உருவாக்க நிதியைப் பயன்படுத்தலாம்.

எந்த வங்கி/ ஸ்கீம் உங்களுக்கு லாபம்? லேட்டஸ்ட் FD வட்டி உயர்வு பற்றி ஒரு பார்வை

இது உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்த எம்.எஸ்.எம்.இ-இன் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எம்.எஸ்.எம்.இ-களுக்கு இரண்டு விதமான நிதியுதவிகளை என்.எஸ்.ஐ.சி.  வழங்குகிறது.

அவை மூலப்பொருள் உதவி மற்றும் சந்தைப்படுத்தல் உதவியாகும்.

அப்பறம் என்ன லோன் பெற்று பிஸினஸை தொடங்குங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Tamil Business Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment