Advertisment

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... இதை மட்டும் செய்தால் மாதம் 24 டிக்கெட் வரை புக் பண்ணலாம்!

ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதற்கான வரம்பை இந்தியன் ரயில்வே அதிகரித்துள்ளது. ஐஆர்சிடிசி கணக்கை ஆதர் எண்ணுடன் இணைத்தவர்கள் மாதம்தோறும் 24 டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... இதை மட்டும் செய்தால் மாதம் 24 டிக்கெட் வரை புக் பண்ணலாம்!

maxiam limit for booking ticket through irctc increased, ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதற்கான வரம்பை இந்தியன் ரயில்வே அதிகரித்துள்ளது. ஐஆர்சிடிசி கணக்கை ஆதர் எண்ணுடன் இணைத்தவர்கள் மாதம்தோறும் 24 டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

ரயில் பயணிகள் ஐஆர்சிடிசி தளம் மூலம் மாதம் தோறும் 24 டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்ய முடியும் என்ற கட்டுபாடு இதுவரை இருந்தது குறிப்பிடதக்கது. நீங்கள் இன்னும் ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்காமல் இருந்தாதும் டிக்கெட் புக் செய்யும்  வரம்பு 12 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

இந்த முடிவால் தங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக பயன்பெறுவார்கள் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment