ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் முக்கிய ஆவணங்களை இப்போது டிஜிலாக்கர் வசதி மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த அமைப்பு சனிக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதளம் மூலம், விளக்கப்படத்துடன் இதைத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 27 அன்று EPFO ஒரு ட்வீட்டில், "உறுப்பினர்கள் UAN அட்டை, ஓய்வூதியம் செலுத்தும் ஆணை (PPO) மற்றும் திட்டச் சான்றிதழை டிஜிலாக்கர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்" என்று கூறியது.
இதன்படி அனைத்து ஆவணங்களும் டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, UAN என்பது அவர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு முக்கியமான ஆவணமாகும்.
அதே நேரத்தில், பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (பிபிஓ) எண் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணாகும், இது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தேவைப்படுகிறது.
EPS சான்றிதழ் என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) வழங்கப்பட்ட ஒரு ஆவணமாகும், இது வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் சேவையின் விவரங்களைக் கொண்டுள்ளது.
இது ஊழியரின் சேவை விவரங்கள், அவர் பணியாற்றிய ஆண்டுகள், ஒரு ஊழியரின் குடும்ப விவரங்கள் மற்றும் உறுப்பினர் இறந்தால் ஓய்வூதியம் பெற தகுதியுடைய குடும்ப உறுப்பினர் ஆகியவற்றைக் காட்டுகிறது.
EPFO ஆனது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கான பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்பீட்டுத் திட்டத்தை நிர்வகிக்கிறது.
நவம்பர் 15, 1951 அன்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணை மூலம் EPFO உருவாக்கப்பட்டது. பின்னர் அது பணியாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம், 1952 இல் மாற்றப்பட்டது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், DigiLocker என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) முதன்மை முயற்சியாகும்.
இது, நாட்டின் குடிமகனின் டிஜிட்டல் ஆவணங்களுக்கான அணுகலை வழங்குகிறது.
இதன் மூலம் குடிமகனின் ‘டிஜிட்டல் அதிகாரமளித்தலை’ நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.