Advertisment

PM Kisan Scheme; பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் யார்?

PM kisan Scheme eligibility rules new update: பி.எம் கிசான் திட்டத்தில் யார் எல்லாம் பயன் பெற முடியாது; தகுதி விவரங்கள் இதோ...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Kisan Yojana Tamil News: Rs 36000 in a year under PM Kisan Man Dhan Yojana scheme

விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்ற திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பலன் பெற தகுதியானவர்கள் யார் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 9 வது தவணையை, ஆகஸ்ட் 9 அன்று பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்காக வெளியிட்டார். ரூ. 19,500 கோடிக்கு மேலான தொகை 9.75 கோடிக்கும் மேற்பட்ட இத்திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் ரூ .6000 தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெறலாம். இந்த தொகை மூன்று சமமான தவணைகளாக விவசாயிகளுக்கு பரிமாற்றம் செய்யப்படும். இதுவரை 9 வது தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள் குறித்து நிறைய குழப்பங்கள் நீடிக்கின்றன.

பிரதமர் கிசான் திட்டத்தின் பயன்கள் யாருக்கு கிடைக்காது?

துரதிருஷ்டவசமாக, கணவன் மனைவி இருவரும் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் நன்மைகளை அனுபவிக்க முடியாது. இந்தத் திட்டத்தில் பயனடையும் ஒரு கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் இருந்தால், அவர்களை அரசாங்கம் 'போலியானது' என்று சொல்லும்.

விவசாயிகளின் குடும்பத்தில் யாராவது வரி செலுத்தினால், இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.

அதேபோல், ஒரு விவசாயி தனது விவசாய நிலத்தை விவசாயத்திற்காக பயன்படுத்தாமல் மற்ற வேலைகளுக்காக அல்லது மற்றவர்களின் வயல்களில் விவசாயம் செய்தால், அவர்கள் திட்டத்தின் பயனை அனுபவிக்க தகுதியற்றவர்களாக இருப்பார்கள்.

மறுபுறம், ஒரு விவசாயி விவசாயம் செய்கிறார், ஆனால் வயல் அவரது பெயரில் இல்லை ஆனால் அவரது தந்தை அல்லது தாத்தாவின் பெயரில் இருந்தால், அவர்கள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற மாட்டார்கள்.

அடுத்ததாக, விவசாய நிலத்தின் உரிமையாளர் ஒரு அரசு ஊழியராகவோ அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியராகவோ, அல்லது தற்போதைய அல்லது முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.

தொழில்முறை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் PM கிசான் சம்மன் நிதி யோஜனா சலுகைகளை அனுபவிக்க தகுதியற்றவர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Kisan Pm Kisan Samman Nidhi Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment