post office account balance post office : வங்கி சேமிப்பு கணக்குகளை விட குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்து இருந்தால் போதும் என்பதால் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகள் கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது வந்தது. வங்கி சேமிப்பை விட பலரும் இப்போது அஞ்சல் சேமிப்பு கணக்கில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Advertisment
அந்த வகையில், அஞ்சல் சேமிப்பில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியான தகவல் இதோ..
இதுவரை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாயாக இருந்து வந்தது.டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் (நேற்று) இதை 500 ரூபாயாக உயர்த்துவதாக அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒருவேலை இந்த 500 ரூபாய் என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்வகிக்கவில்லை என்றால், ஆண்டுக்கு 100 ரூபாய் என அபராதம் விதிக்கப்படும். நாளடைவில் அந்த சேமிப்பு கணக்கே மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும்பாலானவர்கள், முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் போன்றவற்றை வைத்துள்ளவர்கள். அவர்களுக்கு வரும் பென்ஷனை பெற மட்டுமே அந்த கணக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.
டிசம்பர் 11ஆம் தேதியைத் தாண்டியும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத நபர்களுக்கு அபராதக் கட்டணமாக அவர்களது சேமிப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 100 ரூபாய் கழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீடிக்கும் பட்சத்தில் இருப்புத் தொகை குறைக்கப்பட்டு சேமிப்பு கணக்கு காலாவதி ஆகிவிடும். எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை வருகிற டிசம்பர் 11ஆம் தேதிக்குள் ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வேண்டு
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news