post office account post office savings : தபால் துறை மற்றும் இந்திய தபால் துறை வங்கி (ஐபிபிபி), டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ‘டாக் பே’ என்ற புதிய செயலி, நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ‘டாக் பே’ செயலி தொடங்கப்பட்டுள்ளது.
Advertisment
‘டாக் பே’ செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை, நாடு முழுவதும் உள்ள தபால் துறை நெட்வொர்க் மூலம் இந்திய தபால் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்திய தபால் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் உறவினர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். கடைகளில் ‘க்யூஆர்’ குறியீடை ஸ்கேன் செய்து வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்தலாம். இதர கட்டணங்களையும் செலுத்தலாம்.
டாக் பே செயலி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தம் முறைக்கு எளிதான தீர்வை வழங்குகிறது. செயலி மூலம் அல்லது நம்பிக்கைக்குரிய தபால்காரரின் உதவி மூலமும் வங்கி சேவைகளை பெற முடியும். ஒவ்வொரு இந்தியரின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான, உண்மையான இந்திய தீர்வாக ‘டாக் பே’ உள்ளது
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news