இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கி, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சில முக்கிய அறிவிப்புக்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், சேமிப்பு வாடிக்கையாளர்களின் NEFT பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை வரும் 2020ம் ஆண்டு முதல் அனைத்து வங்கிகளுக்கும் கடைபிடிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.இந்த நடவடிக்கை குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் ஏனைய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் அனுப்பும் முறை NEFT எனப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.