பழைய ஓய்வூதிய திட்டத்தில் தன்னை இணைத்துகொள்ள விரும்பும் நபர்களின் பட்டியலை சேகரிப்பதாகவும், அதற்கான அரசு அறிவிப்பு பிறப்பிக்கப்படிருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்காலிகப் பணியாளராக அரசுப் பணியில் ஒரு கட்டத்தில் அரசால் நிரந்திரப்படுத்தபட்டனர். அவர்களை நிரந்தரமாக்கும்போது, புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.
அந்த காலகட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்தான் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும்போது நாங்கள் பணியில் சேர்ந்தோம் என்று கூறினார்கள். இவர்கள் நீதிமன்றத்தையும் இது தொடர்பாக அணுகினர்.
இதில் சிலருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்பட்டது. மேலும் பல்வேறு வழக்குகள் நிலையில் உள்ளன.இந்த தகவலக்ளைதான் துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று நிதித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் பலரு பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்பவர்களின் விருப்ப படியலை கேட்டதாக தவறாக புரிந்துகொள்கிறார்.