SBI Alert : க்விக் ரெஸ்பான்ஸ் கோட் அல்லது க்யூ.ஆர். கோட் குறித்து நாம் அனைவரும் நன்றாக அறிந்திருப்போம். இந்த வசதி இருப்பதால் எளிதில் விரைவாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நாம் மேற்கொள்ள முடிகிறது. மேலும் சமீப காலங்களில் க்யூ.ஆர். கோட் மிகவும் உதவியானதாக இருக்கிறது. ஏன் என்றால் கொரோனா போன்ற பெருந்தொற்றின் போது பணப்பரிவர்த்தனைகளை டிஜிட்டல் பண பரிமாற்றமும் க்யூ.ஆர். கோடுகளும் உதவுகிறது.
Advertisment
ஆனால் க்யூ.ஆர். கோட்களை ஸ்கேன் செய்வது சரியா தவறா என்ற வாதம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. டிஜிட்டல் துறை வளர்வது போன்றே அதில் இருக்கும் குறைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் பழக்கத்தையும் பலரும் பின்பற்றி வருகின்றனர். சமீபத்தில் எஸ்.பி.ஐ. வங்கி தன்னுடைய வாடிக்கையாகளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முடிந்த வரை க்யூ.ஆர். கோட்களை ஸ்கேன் செய்வதை தவிர்த்துவிடுங்கள் என்று கூறியுள்ளது.
சில நேரங்களில் நீங்கள் க்யூ.ஆர்.கோடுகளை ஸ்கேன் செய்தவுடன் பணம் உங்களின் அக்கௌண்ட்டுகளில் இருந்து காணமல் போயிருக்கும். அதனால் எங்கும் ஸ்கேனை தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளது. இந்த விளம்பரம் மேலும் உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும். எனவே அடுத்தமுறை ஸ்கேன் செய்யும் போது யோசனை செய்யுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news