அக்டோபர் முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்காக புதிய மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.எனவே இந்த மாற்றங்களை கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அக்டோபர் 1, 2019 முதல் தனது சேவைக் கட்டணங்களைச் சற்று மாற்றம் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதில் வாடிக்கையாளரின் மாதாந்த சராசரி இருப்பு, (MAB) ஐ பராமரிக்காததால் விதிக்கப்படும் கட்டணங்களை கிட்டத்தட்ட 80% குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்தோடு ஒரு மாதத்தில் 8-10 முறை ஏடிஎம்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பண பரிவர்த்தனைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
தற்போது, குறைந்தது சேமிப்புக் கணக்குகளில் ரூ .5,000 மற்றும் ரூ .3000 வரை பராமரிக்க வேண்டும். அக்டோபர் 1 முதல், இந்த குறைந்தபட்ச இருப்பு மெட்ரோ நகர்ப்புற பகுதி என இரண்டு ரூ .3,000 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு வைப்புத் தொகையை பராமரிக்க தவறும் பட்சத்தில் அந்த வாடிக்கையாளர்களுக்கு முன்போலவே அபராதத் தொகை விதிக்கப்படும். இருப்பினும் இந்த அபராதம் ரூ .80 ல் இருந்து ரூ .15 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பம் ஒரு சிறப்பம்சம்.
மேலும் வழக்கமான வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று பரிவர்த்தனைகள் உட்பட எட்டு இலவச பரிவர்த்தனைகளை வரும் அக்டோபர் ஒன்றில் இருந்து பெறமுடியும்.
இந்நிலையில், பெருநகரங்களில் அல்லாத இடத்தில் அத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் 10 இலவச பரிவர்த்தனைகளைப் பெற வசதியுண்டு. இதில் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஐந்து மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் ஐந்து.
கடன் வட்டி குறைப்பு.. மினிமல் பேலன்ஸ் பிரச்சனைக்கு தீர்வு! எஸ்பிஐ புதிய அறிவிப்புகள்
இந்த வரம்பைத் தாண்டிய கூடுதல் பண பரிமாற்றங்களுக்கு எஸ்பிஐ அபராதமாக ரூ. 5 மற்றும் ஜிஎஸ்டி ₹ 20 என ரூ. 25 வரை கட்டணம் வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.