உள்நாட்டுப் பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தை முடித்துவிட்டு இன்று லாபத்தில் முடிவடைந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 62,533 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 0.6% உயர்ந்து 18,608 ஆகவும் நிறைவுற்றது.
வங்கி நிஃப்டி இன்ட்ராடே புதிய சாதனை உச்சத்தை எட்டியது, 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 43,983.80ஐ தொட்டது. சந்தைகள் பெரும்பாலும் லாபத்தில் நிறைவுற்றன.
நிஃப்டி PSU வங்கி வர்த்தகத்தில் உயர்ந்து, 3.81% உயர்ந்தது. லேண்ட்மார்க்ஸ் கார்ஸ் ஐபிஓ சந்தாவிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாயன்று உலகளாவிய பங்குகள் சீராக இருந்தன, அதே நேரத்தில் அமெரிக்க பணவீக்க தரவுகளுக்கு முன்னதாக டாலர் மிதமான அளவில் குறைந்துள்ளது.
இது பெடரல் ரிசர்வ் மற்றும் பிற மத்திய வங்கிகளை ஆக்ரோஷமான வட்டி விகித உயர்வுகளிலிருந்து பின்வாங்கச் செய்யும் என நம்பப்படுகிறது.
மறுபுறம், சீனாவில், புளூ சிப் பங்குகள் 0.2 சதவிகிதம் மற்றும் 0.3 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/