நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 %-தில் இருந்து 2 % சதவிகிதம் குறைந்துள்ளது.
தமிழகத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் உரையாற்றியதில் கூறியதாவது: “சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வழிகாட்டி மதிப்பில் 5% முத்திரைத்தீர்வை, சொத்து மாற்று வரி 2 %, பதிவுக் கட்டணம் 2 % செலுத்த வேண்டும். எளிய நடுத்தர மக்களுக்கு குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு பெரிதும் பலனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரித்துள்ளது.