இன்றைய பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 417.20 (0.70%) புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகின.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 119 (0.67%) புள்ளிகள் உயர்ந்தன.
தேசிய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, கோல் இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் சோபிக்கவில்லை.
ஆனால் அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ் நிறுவன பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின.
அதேபோல் மும்பை பங்குச் சந்தையில், ஏசியன் பெயிண்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், பார்த்தி ஏர்டெல் பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
எனினும் கோடாக் மஹிந்திரா வங்கி (ரூ.1840), மகிந்திரா அண்ட் மகிந்திரா (ரூ.1274.55), மாருதி சுசூகி; (ரூ.8947.40), பவர் கிரிட் கார்ப் (ரூ.228.35), டாடா ஸ்டீல் (ரூ.112.50) பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகின. இந்தப் பங்குகளின் தற்போதைய விலைகள் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகப்பட்சமாக மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் மாருதி சுசூகி பங்குகள் இறங்கின. இந்த இரு நிறுவன பங்குகளும் முறையே ரூ.13.85 மற்றும் ரூ.52.05 என வீழ்ச்சி கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல் பங்குகள் ரூ.17.95 (2.55%) அதிகரித்து ரூ.721.75 ஆக உள்ளது. அதேபோல் ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் ரூ.6.55 (0.86%) விற்பனையானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil