Advertisment

IRCTC News: கடைசி நேர புக்கிங்…தட்கல் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்யும் ஈஸி வழி

குளிர்சாதன பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.

author-image
WebDesk
New Update
IRCTC News: கடைசி நேர புக்கிங்…தட்கல் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்யும் ஈஸி வழி

இந்தியா முழுவதும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதில் பயணக் கட்டணம் மிகவும் குறைவு என்பதோடு, உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் பொதுமக்களுக்கு ஏதுவாக உள்ளன.

Advertisment

முன்பு போல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை. ஸ்மார்ட்போனில் எளிதாகச் செய்துவிடலாம். அதேபோல், கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் புக்கிங் முறையை வைத்துள்ளது.

இந்த தட்கல் முறையில் குறைந்த அளவிலே டிக்கெட் இருப்பதால், பல நேரங்கள் புக்கிங் செய்யும் நேரத்திற்குள் டிக்கெட்கள் முடிந்து, வெயிடிங் லிஸ்ட்க்கு நாம் சென்றுவிடுவோம். பெரும்பாலும் தட்கல் டிக்கெட் கேன்சல் செய்யப்படாததால், வெயிடிங் லிஸ்ட் கன்ஃபார்ம் ஆகுவது கடினம். எனவே, இந்த செய்திதொகுப்பில் தட்கல் டிக்கெட் புக்கிங்கை உறுதிப்படுத்தும் டிப்ஸை காணலாம்.

குளிர்சாதன பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.

தட்கல் டிக்கெட் அல்லது சாதாரண டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, கேட்கப்படும் விவரங்களையும், கேப்ட்சாவையும் நிரப்ப அதிக நேரம் எடுப்பதை பார்த்தீருக்கலாம்.

நீங்கள் அனைத்து விவரங்களையும் நிரப்பும் நேரத்திற்குள், அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றப்படுவீர்கள்.

இதற்காகவே ஐஆர்சிடிசி இணையதளத்தில் சிறப்பு வசதி ஒன்று உள்ளது. அதில், நீங்கள் பயணிகளின் விவரங்களை சேமித்து வைத்துகொள்ளலாம். நீங்கள் ஐஆர்சிடிசி லாகின் செய்து உங்கள் விவரங்களும், குடும்பத்தினரின் விவரங்களையும் பதவிட்டு சேமித்துகொள்ளலாம். இப்படி செய்துவிட்டால், அடுத்த முறையில் டிக்கெட் புக்கிங்கில் நீங்கள் அதனை நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது.

டிக்கெட் புக்கிங் செய்கையில், fill new details என்பதை கிளிக் செய்யாமல், existing details கொடுக்க வேண்டும். அப்போது, உங்களுடன் பயணிக்கும் குடும்பங்களின் விவரங்கள் தானாகவே இணைக்கப்படும். நீங்கள் பேமெண்ட் பேஜ் நுழைந்து, கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் அல்லது யூபிஐ வாயிலாக பணம் செலுத்தலாம்.

கொரோனா நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை பல கட்டுப்பாடுகளுடன் இயக்கி வந்த நிலையில், கடந்த மாதம் முதல் அனைத்து விதமான ரயில்களும் கட்டுப்பாடுகள் இன்றி வழக்கமான முறையில் செயல்படுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Irctc Tatkal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment