vegetable tamil koyambedu tamil : சென்னையில் கடந்த மூன்று மாதங்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ஆனால் கடந்த சில நாட்களாகவே முக்கியமான காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று (நவம்பர் 23) சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை அதிரடியாக 50 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. நேற்று இதன் விலை 30 ரூபாயாக மட்டுமே இருந்தது. இந்த திடீர் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் பீதியடைந்துள்ளனர். ஆறுதல் தரும் விதமா ஒரு கிலோ அவரைக்காய் 30 ரூபாயாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 20 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
வெங்காயம் விலையில் ஒரு கிலோ வெங்காயம் 62 ரூபாய்க்கே இன்றும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை மலையை தொடும் விதமாக இன்று ரூ. 110க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலைப் பட்டியல்:
தக்காளி - ரூ.50
வெங்காயம் - ரூ.62
அவரைக்காய் - ரூ.30
பீன்ஸ் - ரூ.20
பீட்ரூட் - ரூ.20
வெண்டைக்காய் - ரூ.35
மாங்காய் - ரூ.60
நூக்கல் - ரூ.10
உருளைக் கிழங்கு - ரூ.40
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”