தமிழகத்தில் 1,0 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து அடுத்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 ஊராட்சிகளில் ரூ.13 கோடி மதிப்பில் ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைக்கும் திட்டத்தினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வைப் போல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த நிபுணர்குழுவுடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5% இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளதாகவும் கே.ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.