Advertisment

கோவை, தஞ்சை, கரூர்... 6 முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!

கோவை, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிய முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தால் டிரான்ஸ்ஃபர்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி

6 Chief educational officers transferred in Tamilnadu: தமிழகத்தில் கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிய முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

தமிழக பள்ளிக் கல்வி பணியைச் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: அகில இந்திய தரவரிசை; வேகமாக முன்னேறிய திருச்சி என்.ஐ.டி: இயக்குனர் அகிலா தகவல்

அதன்படி, தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி, நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த அய்யண்ணன், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பூபதி, கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த மதன்குமார், திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கீதா, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment