Advertisment

பி.இ கவுன்சிலிங் நடத்துவதிலிருந்து விலகிய அண்ணா பல்கலைக்கழகம்.. மாணவர்களின் நிலை என்ன?

ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தும் புதிய முறையை கடந்த ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna University

Anna University

உயர் கல்வித்துறை அதிகாரிகளுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டு தோறும் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா செயல்பட்டு வந்தார். இதனிடையே தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டியில் ஒரு உறுப்பினராக இதுவரை செயல்பட்டு வந்த உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தன்னை கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்துக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டியின் தலைவர் மற்றும் தமிழ்நாடு பொது முதுகலை மாணவர் சேர்க்கை கமிட்டிகளின் தலைவர் பதவிகளில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்தை உயர்கல்வித்துறை செயலகத்திற்கும் சூரப்பா அனுப்பினார்.

இதையடுத்து, 2019 - 2020 -ஆம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை நடத்துவதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் விலகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் விலகல் காரணமாக 2019 - 2020 -ஆம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தவுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் நுழைவுத்தேர்வை கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. கடந்த ஆண்டுகளில், பல்வேறு மேம்பட்ட முறைகளில் ஒற்றைச்சாளர முறையில் பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்துள்ளது. குறிப்பாக, ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தும் புதிய முறையை கடந்த ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த துணை வேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிருக்கு அளித்திருக்கும் பேட்டியில், “அண்ணா பல்கலைகழகம் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் இருந்து விலகியதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகம் அல்லது தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் யார் கலந்தாய்வு நடத்தினாலும் மாணவர்கள் கவலையப்பட வேண்டிய அவசியமே இல்லை. மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் நேற்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் பொறியியல் கலந்தாய்வு மாணவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment