திருச்சியில் உள்ள 117-வது பிரதேச ராணுவ படையில் ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம் இன்று (12.11.18) தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துக் கொள்ளலாம்.
ராணுவத்தில் வேலை சேர்ப்பு:
ராணுவத்தில் 57 சிப்பாய் (பொதுப்பணி) மற்றும் எழுத்தர், சலவை பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆள் சேர்ப்பு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இன்று தொடங்குகிறது. இந்த முகாமில் கலந்துக் கொள்ள இளைஞர்கள் படையெடுத்து வருகின்றன.
கல்வி தகுதி விவரம்:
1. சிப்பாய் பொதுப்பணிக்கு 45 சதவீத மதிப்பெண்களுடன் மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. எழுத்தர் பணிக்கு கம்ப்யூட்டர் மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. சலவை பணியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடலில் பச்சை குத்தியவர்களுக்கு அனுமதி இல்லை.
வயது வரம்பு:
இந்த முகாமில் 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்க தகுதியானவர்கள். வரும் 17 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுவதால் விருப்பமுள்ள இளைஞர்களே இன்றே திருச்சி நோக்கி படையெடுக்கலாம்.