Border Security Force (BSF) Constable Recruitment 2019: எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எஃப்) 1,356 கான்ஸ்டபிள் பதவிகள் காலியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதற்கு நவம்பர் 7-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எல்லை பாதுகாப்பு பணியில் சேர ஆர்வமும், தகுதியும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.nic.in -ல் விண்ணப்பிக்கவும்.
ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக்கின் யூ.டி.க்களைச் சேர்ந்தவர்கள் கான்ஸ்டபிள் (ஜி.டி) பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் மெட்ரிகுலேஷன் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
காலியிட விபரம்
மொத்த காலியிடம் - 1356
கல்வித் தகுதி
கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன்அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
ஆகஸ்ட் 1, 2019 தேதியன்று, விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு, உடல் தர சோதனை (பி.எஸ்.டி), உடல் திறன் சோதனை (பி.இ.டி) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க நாள் : நவம்பர் 7
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14, 2019.
எவ்வாறு அப்ளை செய்வது?
அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.nic.in - யை விசிட் செய்யவும்.
’அப்ளிகேஷன் ப்ராசஸ்’ என்பதை க்ளிக் செய்யவும்.
பெயர், கல்வித்தகுதி மற்ற விபரங்களை பதிவிடவும்.
தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்யவும்.
பின்னர் ‘சப்மிட்’ என்பதை க்ளிக் செய்யவும்.
அதை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.